Friday, March 14, 2025
தமிழ்

Fact Check

பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

banner_image

பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட்

 “பாஜக ஆளும் கர்நாடக மாநில பெங்களூரில் தலை விரித்தாடும் ஊழல் காரணமாக மெட்ரோ தூண் சாய்ந்து தாய் மகள் பலி. இதனால் மொத்த பெங்களூரு மெட்ரோ கட்டுமானத்தின் மீதே மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டு நியூஸ் 7 தமிழ் செய்தி  வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் - 01
Screenshot from Twitter @thechanakkiyan
பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் - 02
Screenshot from Facebook / vickee.vickee.963
பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் - 03
Screenshot from Facebook / கவின் திமுக

இதனையடுத்து சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?

Fact Check/Verification

பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

பெங்களூரின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பாதைக்காக அமைக்கப்பட்ட தூண் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 வயது மகன் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கு குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹20 லட்சம் தருவதாக BMRCL அறிவித்துள்ளது. முதலமைச்சர் நிதியிலிருந்து தானும் ₹10 லட்சம் தருவதாக பசவராஜ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விபத்துக்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக பரவும் தகவல் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் வைரலாகும் நியூஸ்கார்டில் மகனுக்கு பதிலாக மகள் என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விபத்து குறித்த விசாரணை நடப்பு நிலையில்தான் உள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்கள் என்று கூறி இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

ஆகவே இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என உறுதிசெய்ய அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். இதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்று  தெளிவு செய்தார்.

Also Read: கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

Conclusion

பெங்களூரில் மெட்ரோ தூண் விழுந்து தாய், மகள் பலியானதற்கு பாஜகவின் ஊழல்தான் காரணம் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.    

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone conversation with Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil, Dated January 13, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.