வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkபிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் பழைய புகைப்படம்!

பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் பழைய புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை

Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“பிரதமர் இன்று ஒரிசா செல்கிறார். முதலில், அவர் Balasore ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிடுவார். பின்னர் அவர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் செல்கிறார். அதாவது, பாதிக்கப்பட்டவர்களுடன் பிரதமரின் புகைப்படத்தில் காட்சியளிக்கும் வகையில் கட்டாக்கில் உள்ள மருத்துவமனையை தற்போது தயார் ஆகிறது … உயிரைவிட விளம்பரம் முக்கியம் குமாரு” என்ற பதிவுடன் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி
Screenshot from Facebook/Anthony Muthu

Archived Link

பிரதமர் மோடி
Screenshot from Facebook/MukavaiRajasekar

Archived Link

Screenshot from Facebook/san.geeth.161446

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஒடிசா ரயில் விபத்து களத்தில் உதவும் RSS சேவகர்கள் என்று 2015ஆம் ஆண்டு புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எஸ்.ஜி சூர்யா!

Fact Check/Verification

பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Outlook india செய்தி ஊடகப்பக்கத்தில் “Gujarat: Painting, Cleaning Before PM Modi’s Visit As Hospital Tries To Hide Facts” என்கிற தலைப்பில் கடந்த நவம்பர் 01, 2022 அன்று வெளியான கட்டுரை கிடைத்தது.

குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட வருகின்ற பிரதமர் மோடிக்காக மோர்பி சிவில் மருத்துவமனைக்கு புதிய வெள்ளைப்பூச்சு உட்பட வேலைகள் நடைபெறுவதாக சர்ச்சை எழுந்தது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இதுபற்றி குற்றம் சாட்டின. இதுகுறித்த செய்திகளிலேயே இப்புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

India Today, National Herald india உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்செய்தி, தற்போது ஒடிசா என்று வைரலாகும் புகைப்படத்துடன் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்று இருந்தது.  ஆம் ஆத்மி கட்சி மோர்பி மருத்துவமனை சீரமைப்பு குறித்த வீடியோவையே வெளியிட்டுள்ளது. வைரலாகும் புகைப்படத்துடன் அந்த வீடியோவில் உள்ள பகுதிகள் ஒத்துப் போவது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?

Conclusion

பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
News Report From, Outlook India, Dated November 01, 2022

News Report From, India Today, Dated November 01, 2022 Twitter Post From, Congress, Dated October 31, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular