Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்பதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,967 கடன் சுமை உள்ளது; வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல். அப்புறம் எதுக்கு கடல்ல பேனா?” என்பதாக புகைப்படத்தகவல் பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: விசிக பொறுப்பாளர்களைத் தேடும் திருவண்ணாமலை காவல்துறை என்று வெளியான போலி அறிவிப்பு!
தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வெள்ளை அறிக்கை குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிதாக ஏதேனும் வெளியிட்டிருக்கிறாரா என்பது குறித்து அறிய ஆராய்ந்தபோது சமீபத்தில் எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
தொடர்ந்து, குறிப்பிட்ட நியூஸ்கார்ட் புதியதலைமுறையின் வாட்டர்மார்க்குடன் இடம்பெற்றிருந்ததால் அவர்களுடைய செய்திகளில் ஆராய்ந்தபோது கடந்த ஆகஸ்டு 9, 2021 ஆம் ஆண்டு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முந்தைய ஆட்சிக்கால நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது.
தொடர்ந்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கடந்த ஆகஸ்டு 09, 2021 ஆம் ஆண்டு அவர் வெள்ளை அறிக்கை வெளியிட்ட லைவ் வீடியோ இடம் பெற்றுள்ளது.
எனவே, தற்போதைய பேனா விவகாரத்துடன் தொடர்பு படுத்தி கடந்த 2021 ஆம் ஆண்டு செய்தியை பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகியது.
Also Read: திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக பழைய வீடியோவை வெளியிட்ட அதிமுக கோவை சத்யன்!
தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்பதாகப் பரவுகின்ற செய்தி கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Twitter Post From, Puthiyathalaimurai, Dated August 09, 2021
Twitter Post From, PTR, Dated August 09, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
August 13, 2021
Ramkumar Kaliamurthy
September 2, 2022
Vijayalakshmi Balasubramaniyan
May 16, 2022