செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024

HomeFact Checkஇலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றாரா தமிழ் கேள்வி செந்தில்வேல்?

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றாரா தமிழ் கேள்வி செந்தில்வேல்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட்

இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே அண்மையில் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அவரது வீட்டை எரித்தனர். ராஜ்பக்சே அவர் குடும்பத்தினருடன் தலைமறைவாகியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! அசாதாரண சூழ்நிலையில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஒரே தீர்வு,தலைமன்னாரை தாண்டி இருக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவர் ஸ்டாலினின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டுவர வருவதே !!” என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் - 1

Facebook Link

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் - 2

Facebook Link

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாகக் கூறி வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.

இவ்வாறு தேடியதில் செந்தில் வேல் அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.

உண்மையில் செந்தில்வேல் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், செந்தில்வேல் அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது செந்தில் வேல் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

Archive Link

செந்தில்வேல் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @Senthilvel79 என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @Senthillvel79 (இதில் ஒரு ‘l’ கூடுதலாக உள்ளது) என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியிலேயே அது Sarcasm (போலிக் கணக்கு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

Parody Account
Screen shot of Parody Account

வாசகர்களின் புரிதலுக்காக செந்தில்வேல் அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

cpm[aroson image

இதேபோல் செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்ட பல டிவீட்டுகள் சமூக வலைத்தளங்களில் இதற்கு முன்னர் வைரலாகியுள்ளது. அவற்றையெல்லாம் நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து தெளிவு படுத்தியுள்ளோம்.

Conclusion

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டது என்பதை கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False/ImposterContent

Sources

Tweet, Senthilvel Parody Account’s Thread, Dated on May 10, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular