ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024

HomeFact Checkதிருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சுத்தம் செய்தாரா பவன் கல்யாண்?

திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சுத்தம் செய்தாரா பவன் கல்யாண்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தீட்டை கழிக்க தீவிர விரதம் இருந்து ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சடங்கு செய்த திரு. பவன் கல்யாண்

Fact: பவன் கல்யாண் உண்மையில் விஜயவாடா கனகதுர்கா கோவில் படிகளையே சுத்தம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சுத்தம் செய்த பவன் கல்யாண் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“தீட்டை கழிக்க தீவிர விரதம் இருந்து ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சடங்கு செய்த திரு. பவன் கல்யாண்.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from Facebook/Chandrudurai

Facebook Link

Screenshot from Facebook/bjpjhansi34

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி லட்டு பிரச்சனையால் ஏற்பட்ட தீட்டை சுத்தம் செய்த பவன் கல்யாண் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது பவன் கல்யாண் உண்மையில் கனகதுர்கா கோவில் படிகளையே கழுவியுள்ளார் என்பது உறுதியாகியது.

திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் ஆந்திர துணை முதல்வரான பவன்  கல்யாண் அதற்கான 11 நாட்கள் பிராயசித்த தீட்சையைக் கடைபிடிப்பதாக அறிவித்ததுடன் அதில் ஒரு பாகமாக விஜயவாடா கனகதுர்கா கோவில் படிகளை கழுவி சுத்தி செய்தார்.

குறிப்பிட்ட செய்தியை பல்வேறு செய்தி நிறுவனங்களும் வீடியோவுடன் பகிர்ந்துள்ள நிலையில் அவர் கனகதுர்கா கோவில் படிகளை சுத்தம் செய்த காட்சியே தற்போது திருப்பதி கோவில் படிகளை பவன் கல்யாண் சுத்தம் செய்ததாகப் பரவுகிறது.

 Also Read: திருப்பதி லட்டுவிற்கு நெய் வழங்கிய நிறுவனம் இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதாக பரவும் பொய்!

Conclusion

திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி லட்டு பிரச்சனையால் ஏற்பட்ட தீட்டை சுத்தம் செய்த பவன் கல்யாண் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது  நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources
YouTube Video From, NewsBuzz, Dated September 24, 2024
YouTube Video From, NDTV, Dated September 24, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular