வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Checkபெட்ரோல் மீதான அனைத்து வரிகளும் ரத்து; லிட்டருக்கு ரூ.45 மட்டுமே விலை என்று அறிவித்தாரா பிரதமர்...

பெட்ரோல் மீதான அனைத்து வரிகளும் ரத்து; லிட்டருக்கு ரூ.45 மட்டுமே விலை என்று அறிவித்தாரா பிரதமர் மோடி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பெட்ரோல் மீதான அனைத்து வரிகளும் ரத்து, விலை குறைப்பு என்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பெட்ரோல்
Source: Facebook

மக்களின் அத்தியாவசியத் தேவைகளான எரிபொருட்களின் விலை கடும் ஏற்றம் கண்டுள்ளது. இதனால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.98.96 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.93.26 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

Also Read: திமுக தலித் அணி தலைவராக வன்னியரசு நியமிக்கப்பட்டுள்ளதாக வதந்தி!

இந்நிலையில், “பெட்ரோல் மீதான அனைத்து வரிகளும் ரத்து! நாளை முதல் லிட்டருக்கு ரூ.45 மட்டுமே! பிரதமர் மோடி அதிரடி” என்பதாக செய்திப் புகைப்படம் ஒன்று நியூஸ் 7 செய்தி சேனல் வெளியிட்டுருப்பது போன்று வைரலாகிறது.

பெட்ரோல்
Source: Facebook

Facebook Link

பெட்ரோல்
Source: Facebook

Facebook Link

பெட்ரோல்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

பெட்ரோல் மீதான அனைத்து வரிகளும் ரத்து, பெட்ரோல் நாளை முதல் ரூபாய் 45 மட்டுமே என்று பிரதமர் மோடி அறிவித்ததாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது, எரிபொருட்கள் விலை குறைப்பு குறித்து ஏதேனும் அறிவிப்பு வந்துள்ளதா என்று பார்த்தபோது பிரதமர் தரப்பில் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை. மேலும், பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, நியூஸ் 7 சேனல் வெளியிட்டிருக்கும் செய்தி லோகோவுடன் குறிப்பிட்ட வைரல் புகைப்படம் பரவி வருவதால் நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் பிரிவு செய்தி ஆசிரியரான சுகிதா சாரங்கராஜை தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது, அவர் அவ்வாறு எந்த அறிவிப்பும் ஒன்றிய அரசின் கீழ் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்தார். மேலும், குறிப்பிட்ட புகைப்படம் நியூஸ் 7 லோகோவை உபயோகித்து போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்தார்.

Conclusion

பெட்ரோல் மீதான அனைத்து வரிகளும் ரத்து, பெட்ரோல் நாளை முதல் ரூபாய் 45 மட்டுமே என்று பிரதமர் மோடி அறிவித்ததாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Sugitha Sarangaraj, News 7 Tamil

NDTV

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular