புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkஏழு வருடங்களாகத் தனக்கு ஊடக ஒவ்வாமை இருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் சொன்னாரா...

ஏழு வருடங்களாகத் தனக்கு ஊடக ஒவ்வாமை இருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் சொன்னாரா பிரதமர் மோடி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஏழு வருடங்களாகத் தனக்கு ஊடக ஒவ்வாமை இருக்கிறது என்பதாக பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசிடம் சொன்னதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஏழு
Source: Facebook

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரத்தில் 5 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்தார்.

Also Read: திமுக, அதிகாரம் கையில் இருப்பதால் விசிக மீது கட்டவிழ்த்து விடும் சாதிவெறியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாரா வைகோ?

இந்நிலையில், “தனக்கு கடந்த ஏழு வருடங்களாக ஊடக ஒவ்வாமை இருப்பதாக் அமெரிக்கப் பயணத்தில் ஊடக சந்திப்புகள் ஏதும் வேண்டாம் என்று கமலா ஹாரிசிடம் பிரதமர் மோடி கோரிக்கை” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஏழு
Source: Facebook

Facebook Link

ஏழு
Source: Facebook

Facebook Link

ஏழு
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

ஏழு வருடங்களாகத் தனக்கு ஊடக ஒவ்வாமை இருப்பதால் பத்திரிக்கை சந்திப்புகள் வேண்டாம் என்று அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடி, கமலா ஹாரிசிடம் சொன்னதாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

சர்வதேச ஊடகங்களிலோ, இந்திய ஊடகங்களிலோ அதுபோன்ற எவ்வித செய்தியும் வெளியாகி இருக்கவில்லை என்பது நமக்கு உறுதியானது. மேலும், அதிலுள்ள வாசகங்கள் கேலிக்குரிய வகையில் தோன்றியது.

அப்போது, புதியதலைமுறை நியூஸ் கார்டு வடிவில் குறிப்பிட்ட செய்தி பகிரப்பட்டு வருவதால் புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்து பார்த்தோம்.

அதில், “கமலா ஹாரிஸை வரவேற்க இந்தியர்கள் காத்திருப்பதால் விரைவில் இந்தியா வரவேண்டும் – பிரதமர் மோடி” என்கிற செய்தி இடம்பெற்றுள்ள நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.

அந்த நியூஸ் கார்டினை எடிட் செய்து குறிப்பிட்ட வைரல் புகைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது நமக்கு உறுதியானது. இதனை புதியதலைமுறை தரப்பிலும் உறுதி செய்து கொண்டோம்.

Conclusion:

ஏழு வருடங்களாகத் தனக்கு ஊடக ஒவ்வாமை இருப்பதால் பத்திரிக்கை சந்திப்புகள் வேண்டாம் என்று அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடி, கமலா ஹாரிசிடம் சொன்னதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Puthiyathalaimurai

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular