வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact CheckPoliticsகேந்திரிய வித்யாலயாவிற்கு சிபாரிசு கடிதம் வழங்கிய எம்பி கனிமொழி என்று பரவும் பழைய தகவல்!

கேந்திரிய வித்யாலயாவிற்கு சிபாரிசு கடிதம் வழங்கிய எம்பி கனிமொழி என்று பரவும் பழைய தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கேந்திரிய வித்யாலயா சேர்க்கைக்காக தூத்துக்குடி எம்பி கனிமொழி சிபாரிசு கடிதம் வழங்கியதாக புகைப்படச்செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

முன்னாள் திமுக செய்தித்தொடர்பாளரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

Screenshot from Twitter @KSRadhakrish
Screenshot from Twitter @Parthas56816778
Screenshot from Facebook/balchandhar.chandhar.7

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?

Fact Check/Verification

கேந்திரிய வித்யாலயா சேர்க்கைக்காக கனிமொழி எம்பி சிபாரிசு கடிதம் வழங்கியதாக பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட பதிவில் இருந்த எம்பி கனிமொழியின் சிபாரிசு கடிதம் குறித்து ஆராய்ந்தபோது இதுகுறித்து கடந்த 2019 ஆம் ஆண்டே ஆர்எஸ்எஸ்ஐச்சேர்ந்த SG Surya இதனைப் பகிர்ந்துள்ளார் என்பது நமக்குத் தெரிய வந்தது.

மேலும், 2022-23 ஆம் ஆண்டுக்கான கேந்திரிய வித்யாலாயா திருத்தப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி எம்பி கோட்டா மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கான இடஒதுக்கீடுகளும் மத்திய அரசால் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனை, கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திலும் திருத்தப்பட்ட வழிமுறைகளில் காண முடியும். சிறப்பு இடஒதுக்கீடு பிரிவில் எம்பி கோட்டா என்கிற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கவில்லை.

Powered By EmbedPress

எம்பி கோட்டாவைப் பொறுத்தவரையில் சிறப்பு ஒதுக்கீடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட 10 மாணவ மாணவியருக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பரிந்துரை செய்து இடஒதுக்கீடு செய்ய முடியும். அந்த வகையிலேயே கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் எம்பி கனிமொழி உள்ளிட்ட எம்பிக்களின் பரிந்துரைக் கடிதங்கள் மாணவர் சேர்க்கைக்கு அனுப்பப்பட்டிருந்துள்ளன.

ஆனால், இந்த 2022-23 கல்வியாண்டு முதல் அந்த நடைமுறை நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 2019 ஆண்டு பரிந்துரைக் கடித செய்தியே தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Also Read: சவுக்கு சங்கர் நாதக வேட்பாளராக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றாரா?

Conclusion

கேந்திரிய வித்யாலயா சேர்க்கைக்காக கனிமொழி எம்பி சிபாரிசு கடிதம் வழங்கியதாக பரவுகின்ற புகைப்படச்செய்தி பழைய தகவல் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Guidelines Copy From, kvsangathan, For the Year 2022-23
Report From, FirstPost, Dated April 26, 2022
Article From, KVSchoollist
AllSchoolsIndia.in
MP Quota List From, AllSchoolsIndia.in
Twitter Post From, SG.Surya, Dated July 28, 2019
Twitter Post From, Abhinandan Mishra, Dated April 14, 2022




(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular