Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் சாதரணமான ஒன்று, அதுகுறித்து பெரிதாக பேச வேண்டியதில்லை என்று ஹெச்.ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பணியாற்றி வந்த ராஜகோபாலன் எனும் ஆசிரியர் பல ஆண்டுகளாக அவரிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளிநிர்வாகமும் அவரை பணி இடைநீக்கம் செயதது.
இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்தப்பின் ராஜகோபாலன் குறித்தும், அவர் பணியாற்றி வந்த பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி குறித்தும் பல அடுக்கடுக்கான புகார்கள் செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையில் தமிழக பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா அவர்கள், “ஊர் உலகத்தில் நடக்காததா அந்த பள்ளியில் நடந்து விட்டது. இதையெல்லாம் பெரிதாக பேச வேண்டிய அவசியம் இல்லை” என்று பேசியதாக புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Archive Link: https://archive.ph/BVnFC
Archive Link: https://archive.ph/3D16m
Archive Link: https://archive.ph/oNZoA
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் சாதரணமான ஒன்று, அதுகுறித்து பெரிதாக பேச வேண்டியதில்லை என்று ஹெச்.ராஜா கூறியதாக புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் வைரலானதைத் தொடர்ந்து இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய முற்பட்டோம்.
முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்ட் புதிய தலைமுறையில் வெளிவந்துள்ளதா என்பதை உறுதி செய்ய, புதிய தலைமுறையின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.
நம் தேடலில் இவ்வாறு ஒரு செய்தி புதிய தலைமுறையில் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்கள்,
“இது பொய் செய்தி, இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை.”
என்று விளக்கமளித்தனர்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் சாதரணமான ஒன்று, அதுகுறித்து பெரிதாக பேச வேண்டியதில்லை என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் பொய்யான ஒன்று என்பது நமக்கு நிரூபணமாகின்றது.
ஏற்கனவே சீமானுக்கும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கும் தொடர்புள்ளதாக பொய் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்து அது பொய் செய்தி என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க:https://newschecker.in/ta/viral-ta/psbb-seeman-link
இப்போது அதனைத் தொடர்ந்து ஹெச்.ராஜா பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி குறித்து மேற்கூறியவாறு பேசியதாக விஷமிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் சாதரணமான ஒன்று, அதுகுறித்து பெரிதாக பேச வேண்டியதில்லை என்று ஹெச்.ராஜா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Puthiya Thalaimurai Digital Team:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
.
Ramkumar Kaliamurthy
January 31, 2025
Ramkumar Kaliamurthy
August 13, 2020
Ramkumar Kaliamurthy
February 15, 2021