திமுக ஆட்சியில் கஞ்சா போதை மோதலில் செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண்களை கிண்டல் செய்தவர்களை உ.பி. போலீஸ் பொது இடத்தில் வைத்து அடித்தனரா?
Fact Check/Verification
திமுக ஆட்சியில் கஞ்சா போதை மோதலில் செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாக பிரித்து கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன்முடிவில், கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்தே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருப்பதை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த செப்டம்பர் 16, 2024 அன்று தந்தி டிவி வெளியிட்டிருந்த செய்தியில் “புதுச்சேரியில் கடுமையாக தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்” என்று இந்த வீடியோ குறித்த செய்தி இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிலும் “நடுரோட்டில் விறகு கட்டையால் மாறிமாறி தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்: புதுச்சேரியில் பரபரப்பு” என்று இந்த மோதல் குறித்த செய்தி இடம்பெற்றிருந்தது.

மக்கள் டிவி செய்தியிலும் புதுச்சேரியில் மாணவர்கள் தாக்குதல் என்று இந்த செய்தி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தாலிபான்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
திமுக ஆட்சியில் கஞ்சா போதை மோதலில் செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report published by Indian Express Tamil Dated September 16, 2024
YouTube Video by, Thanthi TV, Dated September 16, 2024
YouTube Video by, Makkal TV News, Dated September 16, 2024