சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkகனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டாரா ராஜவேல் நாகராஜன்?

கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டாரா ராஜவேல் நாகராஜன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டார் ராஜவேல் நாகராஜன்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கிறித்தவ மதத்தை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வழக்கினை நடத்துவதற்கும் அவரது குடும்ப செலவிற்கும் தேவையான நிதியுதவியை இந்துக்கள் வழங்க வேண்டும் என்று யூடியூபர் ராஜவேல் நாகராஜன் வேண்டுகோல் விடுத்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராஜவேல் நாகராஜன் கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@Punguzhali2

Twitter Link | Archived Link

ராஜவேல் நாகராஜன் கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/Slem Sleeper

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!

Fact Check/Verification

யூடியூபர் ராஜவேல் நாகராஜன் கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து கதிர் நியூஸின் ஆசிரியர் பிரதீப்பை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் இந்த நியூஸ்கார்டு போலியானது, இந்த கார்டை கதிர் நியூஸ் வெளியிடவில்லை என உறுதி செய்தார்.

இதனையடுத்து கதிர் நியூஸின் டிவிட்டர் பக்கத்திலும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று பதிவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராஜவேல் நாகராஜன் கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டுள்ளாரா என்று அவரது சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் அவர் கனல் கண்ணன் குறித்து எந்த பதிவும் பதிவிட்டிருக்கவில்லை. ஆகவே அவரை மின்னஞ்சல் வழியாக தொடர்புக் கொண்டு இதுக்குறித்த அவரின் பதிலை கேட்டோம். இதற்கு அவர் இத்தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவித்தார்.

Also Read: Fact Check: மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு பதில் போலியான நபருக்கு பாதபூஜை செய்ததா பாஜக?

Conclusion

ராஜவேல் நாகராஜன் கனல் கண்ணனுக்காக நிதியுதவி கேட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Pradeep, Editor, Kathir News

Email Conversation with Rajavel Nagarajan, Pesu Tamizaha Pesu
Tweet from Kathir News, Dated July 11, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular