Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு - புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி
வைரலாகும் செய்தி போலியாக பரவி வருகிறது.
விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு என்று புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.
”புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிபாடுதான் அவருக்கு சரியான வழிகாட்டி இல்லை, மேலும் ங்கள் மாநிலத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
உங்கள் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டோடு வைத்துகொள்ளுங்கள்.- புதுச்சேரி முதலமைச்சர் N.ரங்கசாமி” என்று இந்த செய்தி பரவுகிறது.



சமூக வலைத்தளங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யக்கூடாது என்று தடுத்த காவலரை கோவில் யானை தூக்கி எறிந்ததா?
விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு என்று புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பேசியதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
சமீபத்தில் தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்நிலையில், அவரது புதுச்சேரி பொதுக்கூட்ட உரை தொடர்பாக அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று ரங்கசாமி கூறியதாக இந்த செய்தி பரவுகிறது.

எனவே, விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி கூறியுள்ள கருத்தை ஆராய்ந்தபோது, அதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு “நன்றி, வணக்கம், வாழ்த்துகள்” என்றே தெரிவித்திருந்தார்.
மேலும், விஜயின் பொதுக்கூட்டத்தை அவர் செல்போனில் நேரலையில் கண்ட வீடியோவும் ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், அவர் விஜய் உரை குறித்து வேறெந்த கருத்தும் கூறியதாக செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை. எனவே, விஜய்க்கு கண்டனம் தெரிவித்த என்.ரங்கசாமி என்று பரவும் செய்தி போலியானது என்பது நமக்கு உறுதியாகிறது.
Also Read: திமுக அரசு கோவிலை இடித்ததாக பரவும் வீடியோவின் உண்மை என்ன?
விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு என்று புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பேசியதாகப் பரவும் செய்தி போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post from, The federal India, Dated December 09, 2025
YouTube Video From, Sathiyam News, Dated December 09, 2025
Ramkumar Kaliamurthy
October 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 2, 2025
Ramkumar Kaliamurthy
October 1, 2025