Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் தாக்குதலுக்கு பிறகு சேதமடைந்ததாக பரவும் படம்.
சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் தாக்குதலுக்கு பிறகு சேதமடைந்ததாக படம் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக வைரலாகும் படத்தை ராவல்பிண்டி மைதானத்தின் சமீபத்திய படங்களோடு ஒப்பிட்டு பார்த்தோம். அதில் வைரலாகும் படத்திலிருக்கும் மைதானம் ராவல்பிண்டி மைதானத்தின் உண்மையான தோற்றத்திலிருந்து வேறுபட்டிருப்பதை காண முடிந்தது. ராவல்பிண்டி மைதானத்தின் உண்மையான படங்களை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து வைரலாகும் படத்தை Hive Moderation எனும் செயற்கை நுண்ணறிவு படங்களை கண்டறியும் இணையத்தளம் மூலம் ஆராய்ந்தோம். அத்தளம் இப்படம் 86.2 சதவீதம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தது.
Sightengine இணையத்தளம் இப்படம் 98 சதவீதம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தது.
இதனை தொடர்ந்து AI or Not, WasItAI’ ஆகிய இணையத்தளங்கள் இப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என உறுதி செய்தது.
Also Read: RSS ஆதரவாளர்கள் புர்கா அணிந்துக்கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனரா?
இதன்படி பார்க்கையில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் தாக்குதலுக்கு பிறகு சேதமடைந்ததாக பரவும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என உறுதியாகின்றது.
Sources
Getty Images Website
Hive Moderation Website
Sightengine Website
AI or Not Website
WasItAI Website
Ramkumar Kaliamurthy
May 26, 2025
Ramkumar Kaliamurthy
May 24, 2025
Ramkumar Kaliamurthy
May 22, 2025