பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது.

பாஜக தமிழ்நாடு மாநிலப் பொருளாளரான எஸ்.ஆர்.சேகர் “மோடி தமிழகத்திற்கு வரும் போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிட கூடாது…மோடி வரும் போது அசைவம் சாப்பிடுகிறவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்பதாக பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை என்றாரா உதயநிதி ஸ்டாலின்?
Fact check/Verification
மோடி தமிழகத்திற்கு வரும்போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்,சேகர் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
ஐபிசி தமிழின் எழுத்துரு குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டில் இல்லாததால் அவர்களிடம் தொடர்பு கொண்டு அது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்து கொண்டோம். மேலும், குறிப்பிட்ட நியூஸ் கார்டு குறித்து எஸ்.ஆர்.சேகரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், குறிப்பிட்ட கருத்தினை தான் சொல்லவில்லை என்றும், தன்னை கேலி செய்யும் வகையில் போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தார்.
Conclusion
மோடி தமிழகத்திற்கு வரும்போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு தவறாக சித்தரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
S.R.Sekar
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)