Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வாட்சாப் செயலியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டதாக கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நியூஸ்செக்கர் வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்சாப் உதவி எண்ணான என்கிற எண்ணுக்கு வீடியோ ஒன்றை பகிர்ந்து, அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானதா என விசாரித்திருந்தார்.
வாசகர் பகிர்ந்த வீடியோவில்,
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வாட்சாப் செயலியை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட முடிவு. வாட்சாப் பயனர்கள் அனைவரும் இந்த மெசேஜ்ஜை தமது காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள அனைவருக்கும் அனுப்ப வேண்டும். இல்லாவிடில் 48 மணி நேரத்தில் அனுப்பாதவர்கள் வாட்சாப் பக்கம் டெலிட் செய்யப்பட்டு, வாட்சாப் செயலியால் அந்த அக்கவுண்ட் அங்கீகரிக்கப்பட மாட்டாது. அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்ட பிறகு, ஆக்டிவேட் செய்தால் மாதம் 500 ரூபாய் வாட்சாப்புக்க்கு கட்டணம் செலுத்த வேண்டும். வரும் சனிக்கிழமையிலிருந்து வாட்சாப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. நீங்கள் வாட்ஸாப்பை கட்டண செலுத்தாமல் இலவசமாக தொடர் வேண்டுமென்றால் இந்த மெசேஜ்ஜை குறைந்தது 10 பேருக்காவது அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புபவர்களின் வாட்ஸாப் லோகோ நீல நிறமாக மாறும். அதன்பின் அவர்கள்வாட்ஸாப்பை இலவசமாக உபயோகிக்கலாம்.
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் தொடர்ந்து தேடுகையில் இதே தகவல் வேறு சில மொழிகளில் கடந்த சில வருடங்களாகவே பரவி வருவதை காண முடிந்தது.
Also Read: அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்தாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
வாட்சாப் செயலியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அதில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகியது.
மத்திய அரசின் Press information Bureau (PIB) வைரலாகும் இத்தகவலை மறுத்து அதன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அப்பதிவில் வைரலாகும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், மத்திய அரசு இவ்வாறுஒரு உத்தரவை வெளியிடவில்லை என்றும் உறுதி செய்துள்ளது.
தொடர்ந்து ஆய்வு செய்ததில், கடந்த 2012 ஆம் ஆண்டே வாட்சாப் தரப்பிலிருந்து சமூக ஊடகங்களில்களில் பரவும் இத்தகைய தகவல்கள் பொய்யானது என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து, வைரலாகும் வீடியோ நியூஸ் 7 தமிழின் லோகோவை பயன்படுத்தி பரப்பப்படுவதால் இவ்வாறு ஒரு செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டதா என தேடினோம். அதில் வைரலாகும் செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் வீடியோ குறித்து விசாரித்தற்கு, ‘அவ்வீடியோ பொய்யாக எடிட் செய்து உருவாக்கப்பட்டது’ என்று பதிலளித்தார்.
Also Read: ஷ்யாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?
வாட்சாப் செயலியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Sources
PIB’s Tweet, tweeted on 06/10/2021
WhatsApp Clarification
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 29, 2021
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024