வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkநரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்ததற்கு, அமைச்சர் சேகர் பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தாரா எச்.ராஜா?

நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்ததற்கு, அமைச்சர் சேகர் பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தாரா எச்.ராஜா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்து இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அமைச்சர் சேகர் பாபு நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்து இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் தகவல்

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் சமீபத்தில் மகாபலிபுரத்தின் ‘ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் ‘தங்களுக்கு உணவு அளிக்கவில்லை’ என்று புகாரளித்த நரிக்குறவப் பெண் ஒருவரின் அருகில் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்வானது அனைத்து ஊடகங்களில் மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறியது.

Archive Link

இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா அவர்கள் “புனித பெருமாள் கோவிலுக்குள் நரிக்குறவர்களை வரவழைத்து, இந்துக்கள் புண்படுத்தி விட்டார் சேகர் பாபு” என்று கூறி கண்டனம் தெரிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அமைச்சர் சேகர் பாபு நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்து இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் - 1

Facebook Link

அமைச்சர் சேகர் பாபு நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்து இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் - 2

Facebook Link

அமைச்சர் சேகர் பாபு நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்து இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் - 3

Facebook Link

Also Read: அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வதந்தி!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

சேகர் பாபு  நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்து இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று எச்.ராஜா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவலானது நியூஸ் 18 தமிழ்நாட்டின் செய்தி டெம்ப்ளேட்டை அடிப்படையாக கொண்டு பரப்பப்படுவதால், இவ்வாறு ஒரு செய்தியை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் முன்னதாக தேடினோம்.

இந்த தேடலில் இவ்வாறு ஒரு செய்தியை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாட்டின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் செய்தி குறித்து கேட்டோம்.

அதற்கு அவர்கள்,

“இவ்வாறு ஒரு செய்தியை  நாங்கள் வெளியிடவில்லை, இது முற்றிலும் பொய்யான செய்தி”

என்று விளக்கமளித்தனர்.

இதனையடுத்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்களைத் தொடர்பு கொண்டு வைரலாகும் செய்தி குறித்து கேட்டோம்.  அதற்கு அவர், ”இது பொய்யான செய்தி”  என்று  மறுப்பு தெரிவித்தார்.

Also Read: பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்றாரா அண்ணாமலை?

Conclusion

அமைச்சர் சேகர் பாபு நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்து இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று  எச்.ராஜா கூறியதாக பரவும் தகவலானது தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

CTR Nirmal Kumar, BJP IT Wing President

News 18 Tamilnadu Digital Team


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular