Monday, December 22, 2025

Fact Check

கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன்… வைரலாகும் சம்பவம் திமுக ஆட்சியில் நடந்ததா?

banner_image

Claim

image

திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன்.

Fact

image

வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை. இச்சம்பவம் 2020 மே மாதத்தில் நடந்ததாகும். அச்சமயத்தில் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது அதிமுகவாகும்.

“கஞ்சா போதை தகப்பன் காலை வெட்டிய மகன். மத்தபடி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி”  என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு 2023 ஆம் ஆண்டில் பொது நிகழ்ச்சி ஒன்றில் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருந்தார். இதை மேற்கோள் காட்டியே வைரலாகும் வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது.

திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன்.

Post Link

திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன்.

Post Link

திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன்.

Post Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கீழ்சாதியை சார்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் மேல்சாதியினரால் தாக்கப்பட்டாரா?

Fact Check/Verification

திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையின் காலை மகன் வெட்டியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்து தேடினோம்.

அத்தேடலில் இச்சம்பவமானது நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்ததாக நியூஸ் ஜே ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியானது மே 25, 2020 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன்.

குன்னூர் வெலிங்க்டன் பகுதியை சார்ந்த ராஜாராம் என்பவன் கஞ்சா போதையில் இருக்கும்போது அவனது தந்தை ரவிச்சந்திரன் கண்டித்ததாகவும், இதனால் கோபமடைந்த ராஜாராம் ரவிச்சந்திரனை அரிவாளால் வெட்டியதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ரவிச்சந்திரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ராஜாராம் கைது செய்யப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் தந்தி டிவி, ஈடிவி பாரத், விகடன் உள்ளிட்ட ஊடகங்களிலும் 2020 மே மாதத்தில் இச்சம்பவம் குறித்து இதே தகவலுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கிலும் இச்சம்பவம் 2020 ஆம் ஆண்டில் நடந்ததாக தெளிவுப்படுத்தியிருப்பதை காண முடிந்தது.

Also Read: ஆதவ் அர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாரா விஜய்?

Conclusion

திமுக ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையின் காலை மகன் வெட்டியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்

உண்மையில் இச்சம்பவம் அண்மையில் நடக்கவில்லை; 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்ததாகும். அச்சமயத்தில் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது திமுக அல்ல; அதிமுகவாகும்.  

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
Report by News J, Dated May 25, 2020
Report by Thanthi TV, Dated May 25, 2020
Report by ETV Bharat, Dated May 25, 2020
Report by Vikatan, Dated May 25, 2020
X Post By TN Fact Check, Dated May 30, 2025

RESULT
imagePartly False
image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,658

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage