Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்குரிமை பெறுவதில் தவறில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.
வைரலாகும் தகவல் தவறானதாகும். அஇஅதிமுக தரப்பும் தந்தி டிவி தரப்பும் இதை உறுதி செய்துள்ளனர்.
பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தால் பீகாரிலிருந்து 6.5 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் எனும் தகவல் பரவி வருகின்றது.
இந்நிலையில் “”வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் ஒன்றும் தவறு இல்லை” சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றிய நிருபர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல் குறித்த உண்மையை அறிய நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய முடிவு செய்தோம்.
Also Read: இந்துப்பெண்ணை காதலித்து ஏமாற்றிய முஸ்லீம் இளைஞர் என்னும் வீடியோ உண்மையா?
வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்குரிமை பெறுவதில் தவறில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து அஇஅதிமுகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக்கொண்டு இதுக்குறித்து விசாரித்தோம்.
அவர் “இத்தகவல் தவறானது” என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி டிவியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டு தந்தி டிவியின் சமூக ஊடகப் பக்கங்களில் இடம்பெற்றிருக்கவில்லை. ஆகவே தந்தி டிவியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்குமாரை தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம்.
அவர் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது, இந்த கார்டை தந்தி டிவி வெளியிடவில்லை என பதிலளித்தார்.
Also Read: அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்குரிமை பெறுவதில் தவறில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone conversation with Kovai Sathyan, National Spokesperson, AIADMK
Phone conversation with Vinothkumar, Thanthi TV
Ramkumar Kaliamurthy
October 14, 2025
Ramkumar Kaliamurthy
September 27, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 21, 2025