ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுபட்டதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுபட்டதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுபட்டதாக பரவும் நியூஸ்கார்டு!

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.

நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்து ஐயப்ப பக்தர்களுக்கும் கோவில் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் புகார் அளித்ததை தொடர்ந்து இரு தரப்பினரின் புகார்களும் ஏற்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திர பக்தர்களின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவில் நிர்வாகத்தை சேர்ந்த 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், “திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் திருக்கோயில் பணியாளரை தாக்கியத்துடன், உண்டியலையும் சேதப்படுத்த முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அம்மாநில பாஜகவினர் என முதற்கட்ட தகவல்.

அறநிலையத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே, தூண்டுதலின் பேரில் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட்

Facebook Link | Archived Link

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட்

Archived Link

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check/Verification

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுபட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? – அறநிலையத்துறை விளக்கம்’ என்று தலைப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?

Conclusion

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பாஜவினர் வன்முறையில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Puthiya Thalaimurai, Dated December 12, 2023

Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular