செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkகருணாநிதியை திருடன் என்றாரா சுப.வீரபாண்டியன்?

கருணாநிதியை திருடன் என்றாரா சுப.வீரபாண்டியன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கருணாநிதியை திருடன் என்றார் சுப.வீரபாண்டியன்.

Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். சீமான் அவ்வாறு கூறியதாகவே சுபவீ கூறினார்.

திமுக ஆதரவாளரான சுப.வீரபாண்டியன் ஒரு வயதான திருடன் மற்றும் அவனின் மகன் குறித்த கதை கூறி, அக்கதையில் வரும் வயதான திருடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், அந்த மகன் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் என்று கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

கருணாநிதியை திருடன் என்று சுப.வீரபாண்டியன் கூறியதாக பரப்பப்படும் வீடியோ

X Link | Archive Link

கருணாநிதியை திருடன் என்று சுப.வீரபாண்டியன் கூறியதாக பரப்பப்படும் வீடியோ

Archive Link

கருணாநிதியை திருடன் என்று சுப.வீரபாண்டியன் கூறியதாக பரப்பப்படும் வீடியோ

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?

Fact Check/Verification

கருணாநிதியை திருடன் என்று சுப.வீரபாண்டியன் கூறியதாக பரப்பப்படும் வீடியோவில் ‘திராவிடம் 100’ என்ற யூடியூப் சேனலின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

கருணாநிதியை திருடன் என்று சுப.வீரபாண்டியன் கூறியதாக பரப்பப்படும் வீடியோ

இதைத் தொடர்ந்து அந்த யூடியூப் சேனலில் தேடுகையில் ‘சீமானின் ஆணவ அநாகரிகத் தேர்தல் பேச்சு|அடுத்தது கெட்டவார்த்தை பேசுவார்களா?’ என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் சீமான் மார்ச் 30 ஆம் தேதி ராமநாதபுரத்தில் பேசும்போது கருணாநிதியையும், ஸ்டாலினையும் திருடன் என்று கூறி அவமதித்து பேசியதாக சுப.வீரபாண்டியன் பேசி இருந்ததை காண முடிந்தது.

இந்த வீடியோவை உற்று நோக்கியதில் சீமான் கூறியதாக சுபவீ கூறிய கதையை முன்னும் பின்னும் எடிட் செய்து சுபவீ கூறியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதை அறிய முடிந்தது.

சுபவீ அக்கதையை தொடங்கும்போதே (04:12 நேரத்தில்) ‘நான் எதற்காக வேதனைப்பட்டேன்…’ என்றே தொடங்குவதை காண முடிந்தது. இக்கதையை முடித்தப்பின் (04:53 நேரத்தில்) சீமான் பேசியது கொடுமை என்று கூறியிருப்பதை காண முடிந்தது.

இதை தொடர்ந்து, ”… இத்தோடு நிறுத்தியிருந்தால் கூட நான் யாரையோ சொன்னேன். இவர்கள் யூகம் செய்து கலைஞர் என்று குறிப்பிடுகிறார்கள் என்று சொல்லி விடலாம். ஆனால் பேச்சை மிகத் தெளிவாக கொண்டு வந்து முடிக்கிறார்…” என்று சுபவீ கூறியவற்றை முற்றிலுமாக நீக்கி விட்டு, அதை தொடர்ந்து வரும் பேச்சை இணைத்து சுபவீ கருணாநிதியையும் ஸ்டாலினையும் திருடன்என்று கூறியதாக பொருள்வரும்படி மாற்றியிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து சுபவீ விமர்சித்த கதையை சீமான் பேசியுள்ளாரா என தேடினோம். இத்தேடலில் நாதகவின் ஐடி விங் எக்ஸ் பக்கத்திலேயே சீமான் அவ்வாறு பேசிய வீடியோ பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

 Also Read: அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்றாரா அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்?

Conclusion

கருணாநிதியை திருடன் என்று சுப.வீரபாண்டியன் கூறியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக இந்த உண்மை நமக்கு தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Youtube Video from Dravidam 100, Dated March 31, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular