சனிக்கிழமை, மே 4, 2024
சனிக்கிழமை, மே 4, 2024

HomeFact Checkகேசவ விநாயகம் காரில் 2 கோடியை கைப்பற்றியதா பறக்கும் படை?

கேசவ விநாயகம் காரில் 2 கோடியை கைப்பற்றியதா பறக்கும் படை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கேசவ விநாயகம் காரில் 2 கோடியை கைப்பற்றியது பறக்கும் படை.

Fact: இத்தகவல் தவறானது என்று பாஜக தரப்பும், ஜூனியர் விகடன் தரப்பும் தெளிவு செய்துள்ளது.

“அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் அருகே பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்ற காரில் 500 ரூபாய் நோட்டுக்களாக 2 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்!” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கேசவ விநாயகம் காரில் 2 கோடியை பறக்கும் படை கைப்பற்றியதாக பரவும் தகவல்

X Link | Archive Link

கேசவ விநாயகம் காரில் 2 கோடியை பறக்கும் படை கைப்பற்றியதாக பரவும் தகவல்

Archive Link

கேசவ விநாயகம் காரில் 2 கோடியை பறக்கும் படை கைப்பற்றியதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?

Fact Check/Verification

கேசவ விநாயகம் காரில் 2 கோடியை பறக்கும் படை கைப்பற்றியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் பாஜக சமூக ஊடக அணியின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.பாலாஜி வைரலாகும் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று குறிப்பிட்டு அவரது எக்ஸ் பக்கத்தில் டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ஜூனியர் விகடன் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து ஜூனியர் விகடனின் ஆசிரியர் பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்

 Also Read: அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்றாரா அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்?

Conclusion

கேசவ விநாயகம் காரில் 2 கோடியை பறக்கும் படை கைப்பற்றியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from Balaji M S, State President, Social Media Cell, Tamilnadu BJP, Dated April 01, 2024
Phone Conversation with I. Britto, Editor, Vikatan


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular