செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact CheckFact Check: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று தவறாக கடிதத்தில் குறிப்பிட்டாரா?...

Fact Check: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று தவறாக கடிதத்தில் குறிப்பிட்டாரா? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று தவறாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Fact
குறிப்பிட்ட தகவல் தவறான புரிதலில் பரவுகிறது. பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் (BIOT) லண்டனில் இருந்து நிர்வகிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று தவறாக எழுதியதாக செய்தி சமூக வலைத்தளத்தளத்தில் பரவுகிறது.

“எதே பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடலா?” என்பதாக அச்செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Screenshot From Twitter/@Bheema4K
Screenshot From Twitter/@AshokKu19557904
Screenshot From Twitter/@dmrsivakumar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து நிற்பதாகக் கூறினாரா வானதி சீனிவாசன்?

Fact Check/Verification

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தவறாக குறிப்பிட்டதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

பிரிட்டிஷ் இந்தியப்பெருங்கடல் என்கிற சொற்பதம் குறித்து தேடியபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ”They Where Apprehended by the authorities in Diego Garcia of British Indian Ocean Territory (BIOT) along with their Mechanised Fishing Boat” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த தமிழ் அறிக்கையில், “பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (BIOT) டியாகோ கார்சியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என்பதையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் (British indian ocean territoty) என்பது இந்தியப் பெருங்கடலில் 640,000 ஸ்கொயர் கிலோமீட்டர்கள் பரந்து விரிந்த கடற்பரப்பும், 60 ஸ்கொயர் கிலோமீட்டர் நிலப்பரப்பும் ஆகும். இதில் டியாகோ கார்சியா என்பது ஒரு தீவுப்பகுதி ஆகும்.

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் இருந்து 16 பேர் கொண்ட மீனவர்கள் குழு இந்தியப் பெருங்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது பெருங்கடல் எல்லையைத் தாண்டிய வழக்கில் அவர்களை கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி கைது செய்துள்ளனர் BIOT அதிகாரிகள். இதுகுறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் BIOT அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Fact Check: இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

Conclusion

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தவறாகக் குறிப்பிட்டதாகப் பரவும் தகவல் தவறான புரிதலில் பரவுகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Gov.UK
News Report From, Times Of India, Dated March 07, 2023

News Report From, Sun News, Dated March 07, 2023
Twitter Post From, CMOTamilNadu, Dated March 07, 2023
BIOT


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular