ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkதிருப்பதி கோவில் லட்டு காண்ட்ராக்டர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

திருப்பதி கோவில் லட்டு காண்ட்ராக்டர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இந்த ஏழை யாருன்னு தெரியுமா? இவர் தான் திருப்பதி கோயிலோட லட்டு காண்ட்ராக்டர்

Fact: வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் கோல்டன் பாபா என்று அழைக்கப்பட்ட சுதிர் குமார் மக்கர்.

திருப்பதி கோவில் லட்டு காண்ட்ராக்டர் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இந்த ஏழை யாருன்னு தெரியுமா? இவர் தான் திருப்பதி கோயிலோட லட்டு காண்ட்ராக்டர்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from X @experienceluv

Archived Link

Screenshot from facebook/tiruvarurkrishnamoorthy

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என பரவும் பல்கேரியா நாட்டின் சாலை!

Fact Check/Verification

திருப்பதி கோவில் லட்டு காண்ட்ராக்டர் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த சில ஆண்டுகளாகவே அப்புகைப்படம் பரவி வருவதை அறிய முடிந்தது. வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ’கோல்டன் பாபா’ சுதிர் குமார் மக்கர் என்று அறிந்து கொண்டோம்.

கடந்த 2014ஆம் ஆண்டு Zee News வெளியிட்டிருந்த “இந்தியாவின் தங்க மனிதர்களுடன் சந்திப்பு – பகுதி 3” என்று நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ அவர்களது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அதில் இவர் பற்றிய வீடியோவில், இந்தியாவின் தங்க மனிதர் சுதிர் குமாரின் தங்கத்தின் மீதான காதல் அவரை ‘கோல்டன் பாபா’ என்ற புனைப்பெயருடன் அழைக்கச் செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று, கடந்த 2020ஆம் ஆண்டு அவருடைய இறப்பினையும் ”Golden Baba passes away in AIIMS, Delhi, was ill for a long time” என்று செய்தியாக வெளியிட்டிருந்தது.

தொடர்ந்து, திருப்பதி கோவிலில் லட்டு செய்முறை பற்றி தேடியபோது பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகள் அனைத்துமே திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலமாக செய்யப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய முடிந்தது.

Also Read: நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று கூறினாரா பிரசாந்த் கிஷோர்?

Conclusion

திருப்பதி கோவில் லட்டு காண்ட்ராக்டர் என்று பரவும் புகைப்படம் போலியானது என்பது  நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, Zee News, Dated August 10, 2014
News Report From, Times of India, Dated August 02, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular