வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkகாவல்துறை தலைமை காவலர் முதலமைச்சருக்கு எழுதியதாக பரவும் போலி புகார் கடிதம்!

காவல்துறை தலைமை காவலர் முதலமைச்சருக்கு எழுதியதாக பரவும் போலி புகார் கடிதம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

காவல்துறை தலைமை காவலர் ஒருவர் திமுக கட்சியினரைச் சாடியும், காவல்துறையினருக்கான நலன்கள் குறித்தும் கடிதம் ஒன்றினை எழுதியதாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

காவல்துறை
Source: Twitter

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. தேர்தல் நடைபெற்றது தொடர்பாக வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குப்பதிவு தொடர்பாகவும் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.

Source: YouTube

இந்நிலையில் பழனிமுருகன் என்கிற பெயர் கொண்ட தலைமை காவலர் ஒருவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கட்சியினரின் அராஜகம், நீர்த்துப் போன காவலர் நலன் அறிவிப்புகள் என்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியதாக அவதூறான வகையில் புகார் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. ஷத்ரியன் சுபாஷ் என்கிற பெயர் கொண்ட ட்விட்டர் ஐடி ஒன்றில் அக்கடிதம் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?

Fact Check/Verification

காவல்துறை தலைமை காவலர் ஒருவர் முதலமைச்சருக்கு எழுதியதாக பரவுகின்ற கடிதம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட கடிதத்தில் அவதூறு வார்த்தைகளும், தவறான வார்த்தைப் பிரயோகங்களும் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. அரசாங்க பணியில் உள்ள தலைமைக்காவலர் எழுதிய தொனியில் அக்கடிதம் இல்லை.

காவல்துறை
Source: Twitter

காவல்துறை தரப்பில் அதுகுறித்து ஆராய்ந்தபோது குறிப்பிட்ட கடிதம் போலி என்பதாகவும், “போலியான செய்திகளை நம்பாதீர்…பரப்பாதீர்” என்றும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரவும் அக்கடிதம் போலியானது என்று தமிழ்நாடு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

Source: Twitter

Conclusion

காவல்துறை தலைமை காவலர் ஒருவர் முதலமைச்சருக்கு எழுதியதாக பரவுகின்ற கடிதம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

TN police

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular