Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
‘குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு, அவ்வூர்தியில் இடம்பெற்றிருந்த கலைஞர் கருணாநிதி மற்றும் அவரின் துணைவியார் ராசாத்தியமாள் சிலைகளே காரணம்’ என்று தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.
வரவிருக்கும் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடக்கவிருக்கும் அலங்கார அணி வகுப்பில் கலந்துக்ககொள்ள தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில்,
குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்க தமிழகம் உள்ளிட்ட 29 மாநிலங்களிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் முன்வடிவு முதல் மூன்று சுற்றுகள் வரை பரிசீலனையில் இருந்தது. மூன்று சுற்றுகள் முடிவில் இறுதிசெய்யப்பட்ட 12 அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெறவில்லை.
இதற்கு முன்னதாக தமிழக அரசு சார்பில் கடந்த 2017, 2019, 2020, 2021-ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் அலங்கார ஊர்திகள் பங்குபெற்றன.
வல்லுநர் குழு மூலமே குடியரசு நாள் அணிவகுப்புக்கான அலங்கார ஊர்தி தேர்வு நடைபெறுகிறது
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதல்வர் தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கவிருக்கும் அணிவகுப்பில் இடம்பெறும் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கருணாநிதி மற்றும் அவரின் துணைவியார் ராசாத்தியமாள் சிலைகள் தமிழக அலங்கார ஊர்தியில் இடம்பெற்றதே காரணம் என்று புகைப்படம் ஒன்றை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
கூடவே காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரமும் இதே காரணத்தை கூறியதாக கூறி நியூஸ்கார்ட் ஒன்றும் பரப்பப்பட்டு வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழக குடியரசு தின அலங்கார ஊர்தியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியமாள் சிலைகள் இடம்பெற்றிருந்ததாலேயே அது நிராகரிக்கப்பட்டது என்று கார்த்திக் சிதம்பரம் கூறியதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
இந்த ஆய்வில் இரண்டு விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்பினோம்.
தமிழக அலங்கார ஊர்தியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ராசாத்தியமாள் சிலை இருந்ததாக கூறி பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் அப்படமானது எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
டெல்லியைச் சேர்ந்த புதிய தலைமுறை நிருபரான நிரஞ்சன் குமார் என்பவர் தமிழக அரசின் அலங்கார ஊர்தியின் மாதிரியின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அப்படத்தில் காணப்படும் தமிழக ஊர்தியில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் சிலைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தமிழக அலங்கார ஊர்தியில் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் சிலைகள் இருந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் விஷமிகள் சிலர் நிரஞ்சன் குமார் பகிர்ந்த படத்தை எடிட் செய்து கருணாநிதி மற்றும் ராசாத்தி அம்மாளின் சிலை அலங்கார ஊர்தியில் இடம்பெற்றதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி மற்றும் அவரின் மனைவி சிலைகள் இடம்பெறவில்லை என்பது உறுதியாகியப்பின் இவ்வாறு ஒரு தகவலை கார்த்தி சிதம்பரம் கூறினாரா, அதை தந்தி தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டதா என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக, கார்த்தி சிதம்பரம் மேற்காணும் தகவலை கூறினாரா என்பதை அறிய ஊடகங்கள், மற்றும் அவரின் அதைகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் கார்த்திக் சிதம்பரம் இந்த தகவலை மறுத்து பதிவு ஒன்றை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
கார்த்திக் சிதம்பரம் மேற்காணும் கூற்றை கூறவில்லை என்பது உறுதியாகியப்பின் வைரலாகும் நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதா என்பதை அறிய அதன் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.
இதில் தந்தி தொலைக்காட்சி இந்த நியூஸ்கார்டைவெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. மாறாக இந்த நியூஸ்கார்ட் போலியானது தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட மறுப்பு பதிவே கிடைத்தது.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் நமக்கு தெளிவாகியது என்னவென்றால் தமிழக அலங்கார ஊர்தியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் சிலை இடம்பெற்றதாக பரப்பப்படும் தகவலும் , அதை காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கூறினார் என பரப்பப்படும் தகவலும் முற்றிலும் தவறானவை.
Also Read: ‘ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது’ என்றாரா அன்பில் மகேஷ்?
‘குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு, அவ்வூர்தியில் இடம்பெற்றிருந்த கலைஞர் கருணாநிதி மற்றும் அவரின் துணைவியார் ராசாத்தியமாள் சிலைகளே காரணம்’ என்று கார்த்திக் சிதம்பரம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 11, 2025
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025