Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: அப்பாவி முஸ்லீம் இளைஞரிடம் துப்பாக்கி கொடுத்து தீவிரவாதியாக சித்தரித்தது உ.பி. காவல்துறை
Fact: இத்தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த கைத்துப்பாக்கி பைக்கில் வந்த அந்த நபருடையதுதான். அவர் துப்பாக்கியுடன் தப்பித்து போக முயற்சித்தபோது போலீசார் அவரை துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர்.
“அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் எப்படி தீவிரவாதியாக காட்டப்படுகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக இருக்கும் காணொளி. இது இந்த சமூகம் இந்த காணொளியை முடிந்த அளவிற்கு பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!!
ஒரு முஸ்லிம் இளைஞரிடம் போக்குவரத்து காவல் காவித்துறையே வலுக்கட்டாயமாக கைதுப்பாக்கியை கொடுத்து குற்றவாளியாக்கி கைது செய்கிறார்கள்!!
இதைப் பற்றி பேச பாஜகவை ஆதரிக்கும் தலைவர்களுக்கு தைரியம் இருக்கிறதா??
ஆம் என்றால் உடனடியாக தகுந்த வழியை தேர்ந்தெடுத்து போராடுங்கள்…
உத்திரப்பிரதேச காவல்துறையே அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று காட்ட அவர்களின் கைகளில் கைத்துப்பாக்கிகளை திணிக்கும் இதுபோன்ற பொய் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்கவும். ஆதாரத்திற்கு இந்த வீடியோ போதுமானது!”
என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!
அப்பாவி முஸ்லீம் இளைஞரிடம் துப்பாக்கி கொடுத்து தீவிரவாதியாக உ.பி. காவல்துறை சித்தரித்ததாக வைரலாகும் வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ஆஜ் தக் இணையத்தளத்தில் நவம்பர் 30, 2023 அன்று வைரலாகும் வீடியோ குறித்த செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இச்செய்தியில் கூறப்பட்டிருந்தாவது, “கான்பூரில் டிராஃபிக் சிக்னல் ஒன்றில் இளைஞர் ஒருவர் சிவப்பு விளக்கை மதிக்காமல் பைக்கில் சிக்னலை உடைத்து கடந்து சென்றார். போலீஸார் அவரை தடுத்து நிறுத்த முயல்கையில் வேகத்தை அதிகப்படுத்தி பைக்கை ஒட்டியுள்ளார். அதேசமயம் அவர் மற்றொரு பைக்கில் மோதி கீழே விழுந்தார். இதனையடுத்து போலீசார் அவரைப் பிடித்து சோதனை செய்கையில், அவரிடம் கைத்துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஜீ நியூஸ் இணையத்தளமும் இவ்வீடியோ குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது. அச்செய்தியிலும் இதே தகவலே குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் தினேஷ்குமார் எனும் நபர் வைரலாகும் இதே வீடியோவை அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, போலீசார் மீது குற்றம் சாட்டி பதிவு ஒன்று பதிவிட்டிருப்பதையும், அதற்கு கான்பூர் நகர் போலீசார் பதிலளித்து பதிவு ஒன்று பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது.
அப்பதிவிலும் மேற்கண்ட தகவலே பதிலாக தரப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில், உண்மையில் அந்த கைத்துப்பாக்கி பைக்கில் வந்த அந்த நபருடையதுதான் என்பதும், அவர் துப்பாக்கியுடன் தப்பித்து போக முயற்சித்தபோது போலீசார் அவரை துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது.
Also Read: சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் தவறான பழைய புகைப்படம்!
அப்பாவி முஸ்லீம் இளைஞரிடம் துப்பாக்கி கொடுத்து தீவிரவாதியாக உ.பி. காவல்துறை சித்தரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Aaj Tak, Dated November 30, 2023
Report from Zee News, Dated December 01, 2023
Reply from X account, ‘POLICE COMMISSIONERATE KANPUR NAGAR’, Dated November 30, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 9, 2025
Ramkumar Kaliamurthy
October 8, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 4, 2025