வியாழக்கிழமை, மே 9, 2024
வியாழக்கிழமை, மே 9, 2024

HomeFact CheckViralசென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!

சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சென்னையில் நீர்த்தேக்கம் காரணமாக இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் படம்.

Fact: இப்படத்தில் காணப்படம் ரயில் நிலையம் மும்பையில் இருக்கும் ரயில் நிலையமாகும்.  இப்படமானது கடந்த 2015 ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிகின்றது.

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பொழிந்து வருகின்றது. இதன் காரணமாக தலைநகர் சென்னையில் மக்கள் வசிக்கும் பல பகுதிகளில் நீர் நிரம்பி காணப்படுகின்றது. இதன் காரணமாக மக்களின் சராசரி வாழ்வியலே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை ரயில் நிலையம் ஒன்றில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதாகவும், அதில் படகு செல்வதாகவும் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத்தகவல்

X Link | Archive Link

சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத்தகவல்

Facebook Link

சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத்தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகின்றதா?

Fact Check/Verification

சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் @vyas_sumeet எனும் எக்ஸ் தள கணக்கில் மும்பை நலசோபர பகுதியில் உள்ள ரயில்வே நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறி இதே படத்தை ஜூன் 19, 2015 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் மும்பையில் கனமழை நீடிப்பு- ரெயில் நிலையத்தில் சிக்கித்தவித்த பயணிகளை மீட்கும் கடற்படை என்று தலைப்பிட்டு ஜூலை 11, 2018 அன்று மாலை மலர் வெளியிட்டிருந்த செய்தியில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத்தகவல்
Screengrab from Maalai Malar

இதனையடுத்து தேடியதில் வேறு சில ஊடகங்களும் இதே படத்தை பயன்படுத்தி மும்பை மழை குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனடிப்படையில் காண்கையில் தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் படம் அண்மையில் எடுக்கப்பட்டதல்ல, அப்படமானது 2015 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.
  2. அதேபோல் அப்படத்தில் காணப்படும் ரயில் நிலையம் சென்னையில் இருக்கும் ரயில் நிலையம் அல்ல. அது மும்பையில் இருக்கும்  ரயில் நிலையமாகும்.

Also Read: குடிநீர் ஊர்தி மூலமாக கழிவுநீர் அகற்றப்படுவதாக தவறாக பரவும் 2021ஆம் ஆண்டு புகைப்படம்!

Conclusion

சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post from the user @vyas_sumeet, Dated June 19, 2015
Report from Maalai Malar, Dated July 11, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular