சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஉத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்கள் என்று பரவும் AI புகைப்படம்!

உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்கள் என்று பரவும் AI புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்கள்
Fact: வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்கள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“போர்வெல் குழாய் கிணற்றில் விழுந்த தமிழக சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் திராவிட மாடல் தோல்வியடைந்தது.
ஆனால் சுரங்க விபத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்களை உயிருடன் மீட்டது தேசிய மாடல்! நரேந்திர மோடி அரசிற்கு பாராட்டுக்கள்.”
என்று இந்த புகைப்படத்தை அர்ஜூன் சம்பத் உட்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உத்தரகாண்ட்
Screenshot from X @imkarjunsampath

Archived Link

Screenshot from X @SRSekharBJP

Archived Link

Screenshot from X @EPSTamilNadu

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்கள் என்று பரவும்  புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை Hive AI Detector மூலமாக ஆராய்ந்தபோது 99 சதவீதம் இப்புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் உறுதி செய்ய முடிந்தது.

தொடர்ந்து, இப்புகைப்படம் குறித்து ஆராய்ந்தபோது “Exclusive Minds” என்கிற X தளத்தில் இதே போன்று சுரங்க விபத்தை முன்வைத்து பல்வேறு புகைப்படங்கள் AI மூலமாக வடிவமைக்கப்பட்டு இடம் பெற்றிருந்தன.

இதற்கு முன்பாகவும், பல்வேறு AI புகைப்படங்களை இந்த பக்கம் வடிவமைத்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.

எனவே, வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

Also Read: பில்கேட்ஸ் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தாரா ?

Conclusion

உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்களின் குழு புகைப்படம் என்று பரவுவது AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Result by Hive AI detector
Tweet by @Exclusicev_Minds, dated November 29, 2023

இந்த கட்டுரை Newschecker ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது.


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular