வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Checkகுடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் ‘பெரியார் சிலை இடம்பெற்றது தவறு’ என்றாரா வீரமணி?

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் ‘பெரியார் சிலை இடம்பெற்றது தவறு’ என்றாரா வீரமணி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என்று கி.வீரமணி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்

73 ஆவது குடியரசு தினம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில் மத்திய அரசு நிராகரித்த தமிழக ஊர்தியை அடிப்படையாக வைத்து மூன்று ஊர்திகள் உருவாக்கப்பட்டு, அவை அணிவகுப்பில் இடம்பெற்றது. இந்த மூன்று ஊர்திகளுள் ஒன்றில் பெரியார் சிலையும் இடம்பெற்றது.

இந்த விஷயமானது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைய உருவாக்கிய நிலையில், “சுதந்திர தின நாளை கருப்பு தினமாக அறிவித்தவர் தந்தை பெரியார். அவரின் சிலையை குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழக அரசு பயன்படுத்தியது மிகவும் தவறான செயலாகும்” என்று தி.க. தலைவர் கி. வீரமணி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என்று கி.வீரமணி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என்று கி.வீரமணி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என்று கி.வீரமணி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

Also Read: தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என்று கி. வீரமணி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முன்னதாக வீரமணி அவர்கள் மேற்காணும் கூற்றை பேசியுள்ளாரா என்பதை அறிய அவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம், இணையத்தளம்  மற்றும் பொது ஊடகங்களில் இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் தமிழக ஊர்திக்கு டெல்லி அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசை  எதிர்த்து, வீரமணி அவர்கள் நேற்று (26/01/2022) பெரியார் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பதை அறிய முடிந்தது. இதை தவிர்த்து மேற்காணும் கூற்றை அவர் பேசியதாக எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு  நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. 

ஆகவே தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள்,

“இது முற்றிலும் பொய்யான செய்தி. இந்த நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை.”

என்று பதிலளித்தனர்.

இதனையடுத்து இத்தகவலானது தந்தி தொலைக்காட்சியின் ஊடகப் பக்கங்களிலும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று மறுப்பு தெரிவிக்கபட்டது.

Also Read: லாவண்யா உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்றாரா திமுக எம்.பி. பழனிமாணிக்கம்?

Conclusion

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் பெரியார் சிலை இடம்பெற்றது தவறு என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Thanthi TV

Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular