Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று திமுக எம்.பி.யான பழனிமாணிக்கம் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவமானது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், “மதமாற்ற கொடுமையால் தீவிர திமுக தொண்டரின் மகளான லாவண்யா தற்கொலை செய்திருப்பது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று உதயநிதி நேரில் வந்து அஞ்சலில் செலுத்தாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது.” என்று திமுகவைச் சேர்ந்த தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: ‘ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது’ என்றாரா அன்பில் மகேஷ்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று திமுக எம்.பி.யான பழனிமாணிக்கம் கூறியதாக தகவல் ஒன்று பரவியதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இந்த தகவல் பரப்பப்படுவதால் முன்னதாக இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்று தந்தி தொலைக்காட்சி தரப்பில் வெளியிடப்பட்டிருந்த பதிவையே காண முடிந்தது.
இதனையடுத்து பழனிமாணிக்கம் அவர்களும் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலை மறுத்து அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தததை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கும்போது மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று பழனிமாணிக்கம் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது.
Also Read: தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டதா?
மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று திமுக எம்.பி.யான பழனிமாணிக்கம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Also Read: பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் தாக்கப்பட்டதா?
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 4, 2025
Ramkumar Kaliamurthy
April 2, 2025