Fact Check
இருவேறு நிகழ்ச்சிகளில் ஒரே பெண்ணுக்கு நிவாரணம் அளித்தாரா விஜய்?
Claim
தவெக தலைவர் விஜய் இருவேறு நிகழ்ச்சிகளில் ஒரே பெண்ணுக்கு நிவாரணம் அளித்தார்.

Also Read: சாலையில் ஓடும் மழை நீரில் ஸ்கேடிங் செய்த இளைஞர்; வைரலாகும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?
Fact
தவெக தலைவர் விஜய் நேற்றைய முன்தினம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் மக்களை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு நிவாரண பொருடகளை வழங்கினார். இந்நிலையில் விஜய் ஒரே பெண்ணுக்கு இருவேறு நிகழ்ச்சிகளில் மீண்டும் மீண்டும் நிவாரணம் அளித்ததாக கூறி புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வில் வைரலாகும் படத்தில் மேலேயுள்ள படம் சென்ற வருடம் நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நிவாரண உதவி அளித்தபோது எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது.
இந்த நிகழ்வின் முழுப்பகுதி சன் நியூஸ் யூடியூப் பக்கத்தில் டிசம்பர் 30, 2023 அன்று நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டிருந்தது. அதில் 3:32:52 நேரத்தில் வைரலாகும் படத்திலிருக்கும் பெண் நிவாரண உதவி பெறுவதை காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் படத்தில் கீழே இருக்கும் படம் அண்மையில் பனையூரில் எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது. இதுக்குறித்த வீடியோ புதிய தலைமுறை யூடியூப் பக்கத்தில் நேற்றைய முன்தினம் (டிசம்பர் 03, 2024) வெளியிடப்பட்டிருந்தது. அதில் வீடியோவின் இரண்டாவது வினாடியிலேயே வைரலாகும் படத்திலிருக்கும் பெண் நிவாரண உதவி பெறுவதை காண முடிந்தது.

இவ்விரு வீடியோக்களிலும் இருந்த பெண்களின் முகத்தோற்றத்தை ஒப்பிட்டு பார்க்கையில் இவ்விரு பெண்களும் வெவ்வேறானவர்கள்; வைரலாகும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல ஒரே பெண் அல்ல என அறிய முடிந்தது.

Also Read: பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டாரா?
Result: False
Sources
Report from Sun News, Dated December 30, 2023
Report from Puthiya Thalaimurai, Dated December 03, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.