Claim: சீமானிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் விசிகவை சேர்ந்தவர் என்று பரவும் படம்
Fact: வைரலாகும் தகவலில் காணப்படும் நபர் சீமானிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் அல்ல. இத்தகவலை அவரும் விசிக ஐடி விங்கும் உறுதி செய்துள்ளது.
சமீபத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் அவருக்கும் மாலை மலர் பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது ‘உன் பெயரென்ன’ என்று சீமான் கேள்வி எழுப்ப, ‘சிராஜிதீன்’ என்று அந்த பத்திரிக்கையாளர் பதிலளித்தார். அதற்கு, ‘அப்போ நீ அப்படித்தான் பேசுவ’ என்று சீமான் கூறினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த பத்திரிக்கையாளர் விசிகவை சார்ந்தவர் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் பழைய வீடியோ!
Fact Check/Verification
சீமானிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் விசிகவை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக வைரலாகும் படத்தில் காணப்படும் நபரும் சீமானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரும் ஒருவரா என உறுதி செய்ய மாலை மலர் டிஜிட்டல் பொறுப்பாளர் ரதீஷை தொடர்புக்கொண்டு விசாரித்தோம். ரதீஷ் மாலை மலர் தரப்பில் விசாரித்து படத்திலிருப்பவர் மாலை மலர் பத்திரிக்கையாளர் அல்ல என உறுதி செய்தார்.
இதனையடுத்து தொடர்ந்து தேடுகையில் வைரலாகும் இத்தகவல் தவறானது. வைரலாகும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள சிராஜிதீன் பத்திரிக்கையாளர் அல்ல; அவர் தற்போது சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றார் என்று விசிக தரப்பில் தெளிவு செய்து X பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.
இதனையடுத்து வைரலாகும் படத்தில் காணப்பட்ட சிராஜிதீனும் அவரது X பக்கத்தில் இதுபோன்ற தவறான கருத்துகளை பதிவு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸை டேக் செய்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளதையும் காண முடிந்தது.
இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள சிராஜிதீன், சீமானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர் சிராஜிதீன் கிடையாது என்பது தெளிவாகின்றது.
Also Read: ராகுல் காந்தி கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் பரவும் எடிட் புகைப்படம்!
Conclusion
சீமானிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் விசிகவை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நபர் மாலைமலர் பத்திரிக்கையாளர் சிராஜிதீன் கிடையாது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation with Ratheesh, Maalai Malar
X Post from VCK IT Wing, Dated September 29, 2023
X Post from Sirajudeen KMD, Dated September 28, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)