வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact CheckViralகுடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்றாரா நிர்மலா சீதாராமன்?

குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்றார் நிர்மலா சீதாராமன்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை நாளை (மே 28) பிரதமர் திறக்கவிருக்கின்றார். ஆனால் குடியரசுத் தலைவர் திரளபதி முர்முதான் இக்கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் “அரசியல், அனுபவம், குடும்ப பின்னணி என எல்லாவற்றிலும் முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு. அதனால் புதிய பாராளுமன்றத்தை நான் திறந்து வைக்கமுடியுமா? பிரதமர் திறந்துவைப்பதுதான் முறை; மரபு” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

 குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@aruran_tiru
 குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/சகாயடேவிட் ஜேசுராஜ்
 குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/mohamed.meeran.332

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check/Verification

குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில், “ஜனாதிபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று நாடாளுமன்றத்தை அவர் தான் திறக்க வேண்டும் என கோருகிறார்கள்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக தந்தி தொலைகாட்சி நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.   

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

Conclusion

குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Facebook Post from Thanthi Tv, Dated May 25, 2023

Phone Conversation with Vinoth Kumar, Thanthi Tv, Dated May 27, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular