புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact CheckViralபுதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்றாரா சுகி.சிவம்?

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்றாரா சுகி.சிவம்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்றார் சுகி.சிவம்

Fact: சுகி.சிவம் இத்தகவலை மறுத்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலில் நந்தி சிலை இருந்ததாக பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், “புதிய நாடாளுமன்றத்தில் நந்தி வடிவில் செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது” என்று ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்று சுகி.சிவம் கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@ashok777_kalam
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்று சுகி.சிவம் கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/ganesan.bjp.31
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்று சுகி.சிவம் கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/Jeya Kumar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இலவச மின்சாரம் என்கிற கர்நாடக அரசு வாக்குறுதியால் மின்கட்டணம் வாங்க வந்த அதிகாரி மக்களால் தாக்கப்பட்டாரா?

Fact Check/Verification

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்று சுகி.சிவம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது U2Brutus எனும் யூடியூப் சேனலின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து U2Brutus நிறுவனத்தின் தலைவர் மைனர் வீரமணியைத்  தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அவர் தெளிவு செய்தார்.

வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என உறுதியாகிய நிலையில் சுகி.சிவம் இவ்வாறு பேசினாரா என்பது குறித்து ஆராய்ந்தோம். இதில் சுகி.சிவம் அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இத்தகவலை மறுத்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

மேலும் அவரது யூடியூப் பக்கத்திலும் வைரலாகும் இத்தகவலை மறுத்து வீடியோ ஒன்றை சுகி.சிவம் வெளியிட்டிருந்தார்.

Also Read: குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்று சுகி.சிவம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from Suki Sivam, Dated May 28, 2023

Shorts Video from Suki Sivam
Phone Conversation with Minor Veeramani, Dated May 29, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular