சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkவீட்டை காலி செய்யாத காரணத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா?

வீட்டை காலி செய்யாத காரணத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

வீட்டை காலி செய்யாத காரணத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆவதற்கு முன்பாக தான் குடியிருந்த வீட்டை காலி செய்ய மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக இந்த வீடியோ தகவல் பரவி வருகிறது.

Screenshot From Twitter @SuEswaran

இதனையடுத்து சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

Fact Check/Verification

வீட்டை காலி செய்யாத காரணத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவில் இருக்கும் நபர் ஆளுநரை ஒத்திருந்தாலும், காவல்துறை வாகனத்தில் ஏற்றப்படும்போது அது மற்றொரு நபர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே, வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அதன்முடிவில், கடந்த ஆகஸ்ட் 27, 2021 அன்று உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டிருந்த ட்வீட் ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், குறிப்பிட்ட நபர் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்ந்தபோது The Wire கடந்த ஆகஸ்ட் 27, 2021ல் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதன்படி, வைரல் வீடியோவில் இருக்கும் நபர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் தாக்குர் என்பது தெரிய வந்தது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமிதாப் தாக்குரின் வீடியோவே அது என்பதும் உறுதியானது.

Also Read: பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?

Conclusion

வீட்டை காலி செய்யாத காரணத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையில்லை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Report From, The Wire, Dated August 27, 2021
Twitter Post From, Akhilesh Yadav, Dated August 27, 2021
Article From, Hindustan Times, Dated March 14, 2022
YouTube Video From, NDTV India, Dated August 27, 2021
YouTube Video From, Indiatimes, Dated August 29, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular