Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை ‘முஸ்லீம் எக்ஸ்பிரஸாக’ மாற்றினரா இஸ்லாமியர்கள்?
ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

தமிழகத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க கோரிக்கை விடுத்துள்ளாரா அன்புமணி ராமதாஸ்?
தமிழகத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் கோரிக்கையுடனேயே டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தோம் என்று பாமக அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்றாரா ஈ.பி.எஸ்?
ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை என பரவும் வதந்தி!
ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் நுழையக்கூடாது என்று விரட்டப்பட்டாரா இந்து ஒருவர்?
இஸ்லாமியர்கள் வாழும் தெருவிற்குள் நுழையக்கூடாது என்று இந்து ஒருவர் அடித்து விரட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)