ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkதமிழகத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க கோரிக்கை விடுத்துள்ளாரா அன்புமணி ராமதாஸ்?

தமிழகத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க கோரிக்கை விடுத்துள்ளாரா அன்புமணி ராமதாஸ்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தமிழகத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் கோரிக்கையுடன் டெல்லி மசோதாவுக்கு ஆதரவு – அன்புமணி ராமதாஸ் 

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது.

தமிழகத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் கோரிக்கையுடனேயே டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.

“தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் டெல்லி நிர்வாக மசோதாவை பாமக ஆதரித்தது – அன்புமணி ராமதாஸ்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.

தமிழகத்தை
Screenshot from Twitter @Magaraja2021

Archived Link

தமிழகத்தை
Screenshot from Twitter @VeerasekarElan1

Archived Link

Screenshot from Facebook/Soundar

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை என பரவும் வதந்தி!

Fact Check/Verification

தமிழகத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் கோரிக்கையுடனேயே டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தோம் என்று பாமக அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் மாலைமலர் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.

அதில், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று, “நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது: அன்புமணி குற்றச்சாட்டு” என்று நியூஸ்கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது. குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே வைரல் நியூஸ்கார்டினை எடிட் செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது.

Original News Card
Edited News Card

மேலும், மாலைமலரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் ” மாலை மலர் நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமிகள் பரப்பும் போலி நியூஸ் கார்டு” என்று வைரல் நியூஸ்கார்ட் போலியானது என விளக்கமளித்துள்ளனர்.

Also Read: இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் நுழையக்கூடாது என்று விரட்டப்பட்டாரா இந்து ஒருவர்?

Conclusion

தமிழகத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் கோரிக்கையுடனேயே டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தோம் என்று பாமக அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post From, Malaimalar, Dated August 01, 2023

Facebook Post From, Malaimalar, Dated August 09, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular