Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:-
விஜய் மல்லையா வழக்கில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் முதல் குற்றவாளிகள் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் செய்து ரோல்ஸ் ராய்ஸ் காரை உபயோகிக்கும் விஜய் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற தகவல் தவறானதாகும்.
ரவிவர்மா ஓவியம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் அப்படம் நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் படமாகும்.
சீன அரசு சீன வங்கிகளில் பணம் எடுக்க விதித்த கட்டுப்பாடுகளுக்கு மோடிதான் காரணம் என்று திருமாவளவன் டிவீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று பரவி வருகின்றது. ஆனால் அந்த ஸ்கிரீன்ஷாட் போலிக் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டதாகும்.
பாஜகவுக்கு எதிராக செய்திகளை திரித்து பரப்புவதே எனது வேலை என்று ஊடகவியலாளர் தி. செந்தில் வேல் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் அந்த நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 8, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 1, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 25, 2025