Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றில் அவருக்கு பின்புறம் உள்ள ஷெல்பில் “இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவது எப்படி?” என்கிற புத்தகம் இருந்ததாகப் பரவுகின்ற புகைப்படம் போலியானதாகும்.
சென்னையின் பிரபலமான தேவி தியேட்டர் வளாகம் விரைவில் மூடப்பட உள்ளதாக பரவிய செய்தி தவறானதாகும்.
பதஞ்சலி நிர்வாகத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் அவ்வீடியோ பழைய வீடியோவாகும்.
கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் மோடியிடம் நேரடியாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானதாகும்.
பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு இந்த டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா, ஏன் கலைஞர் பிறந்தநாளுக்கு மட்டும் இவ்வாறு ஒரு சிறப்பு சலுகை? என்று நாராயணன் திருப்பதி டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)