Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

கே.பி.முனுசாமி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.ஆனால் இது தவறானத் தகவலாகும்.

முக்குலத்தோர் தயவில்லாமல் தன்னால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

பெட்ரோல் விலையேற்றம் குறித்து பேசிய ஒருவரை பிரதமர் நரேந்திர மோடி அமர சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் உண்மையில் அவ்வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

சி.டி.ஆர்.நிர்மல்குமார் கன்றுக்குட்டியின் மேல் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தை சூடு போட்டதாக கூறி புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் இது தவறானத் தகவலாகும்.

தமிழர்கள் பலரும் மார்வாடிகள் இல்லையென்றால் பிச்சை எடுக்கும் நிலையில்தான் இருந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்லியதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)