Politics
மோடி பெட்ரோல் விலையேற்றம் குறித்து பேசியவரை அமர சொன்னாரா?
பெட்ரோல் விலையேற்றம் குறித்து பேசிய ஒருவரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமர சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.vn/rHQHN
இந்தியாவில் தற்சமயம் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் இன்றைய தேதியில் பெட்ரோல் ரூ.93.11க்கும், டீசல் 86.45க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த விலையேற்றத்தினால் மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், எண்ணெய் வகைகள், பருப்புகள் போன்றவையும் விலையேற்றம் அடைந்துள்ளன.
பெட்ரோல், டீசலின் இந்த விலையேற்றத்திற்கு மத்திய அரசு விதிக்கும் வரியே காரணமென்று ஒரு தரப்பும், இல்லை மாநில அரசுகள் விதிக்கும் வரியே காரணமென்று மற்றொரு தரப்பும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வாதிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல் விலையேற்றம் குறித்து நரேந்திர மோடி அவர்களிடம் ஒருவர் முறையிடும்போது, அவரை மோடி அவர்கள் அமரும்படி அறிவுறுத்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.vn/goOQT

Archive Link: https://archive.vn/8b0yY

Archive Link: https://archive.vn/E7X3b
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பெட்ரோல் விலையேற்றம் குறித்து பேசியவரை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமர சொல்லும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உண்மையில் இவ்வாறு ஒரு இந்நிகழ்வு நடந்ததா?, ஒருவேளை இவ்வாறு ஒரு நிகழ்வு நடந்திருக்கும்பட்சத்தில் அது எப்போது, எங்கு நடைப்பெற்றது என்பது குறித்து தேடினோம்.
அவ்வாறு நாம் தேடியதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவின் பின்னணி குறித்து நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் வைரலாகும் வீடியோவில் காணப்படுவதுபோல் மோடி அவர்கள் மனிதர் ஒருவரை அமரச் சொன்னது உண்மையே. ஆனால் அந்த மனிதர் பெட்ரோல் விலையேற்றம் குறித்து கேட்டதாக வரும் ஒலி உண்மையானது அல்ல. அது பொய்யாக எடிட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டதாகும்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுடன் காணொளி மூலம் உரையாடினார். இந்த உரையாடலின்போது மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணங்கிய பயனாளர் ஒருவரை பிரதமர் உட்காரச் சொன்னார்.
இந்த நிகழ்வே எடிட் செய்யப்பட்டு பெட்ரோல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, கேள்வி எழுப்பியவரை பிரதமர் அமரச் சொன்னதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
மோடி உரையாடிய உண்மையான வீடியோ, பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அவ்வீடியோ உங்கள் பார்வைக்காக:
Conclusion
பெட்ரோல் விலையேற்றம் குறித்து பேசிய ஒருவரை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமர சொன்னதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் வாசகர்களுக்கு விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Manipulated
Our Sources
Twitter Profile: https://twitter.com/EpFzjFfReHHcm7F/status/1359189728025665544
Facebook Profile: https://www.facebook.com/a.nagaimansoor/videos/4983465015027863
Facebook Profile: https://www.facebook.com/100006929914841/videos/3123989001175400
PM’s Official YouTube Page: https://www.youtube.com/watch?v=K3FsarGT0Eg&feature=youtu.be
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)