இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

2ஜி வழக்கில் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறதா?
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு வருவதாகப் பரவும் புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாகும்.

தமிழ்நாடு என்கிற பெயரை மாற்றுவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையா?
தமிழ்நாடு என்கிற பெயரை மாற்றி நிச்சல பிரதேசம் எனவும், தஷிண பிரதேசம் எனவும் அறிவிப்போம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகப் பரவுகின்ற புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாகும்.

திமுக ஜெயிக்கும் என்கிற கருத்துக்கணிப்பினை டைம்ஸ் நவ் வெளியிடவில்லையா?
திமுக ஜெயிக்கும் என்கிற கருத்துக்கணிப்பினை நாங்கள் வெளியிடவில்லை என்று டைம்ஸ் நவ் மறுப்பு தெரிவித்ததாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.

வன்னியரசு திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றாரா?
திமுகவினர் தேர்தல் பணிகளில் தங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று வன்னியரசு அவர்கள் வருத்தம் தெரிவித்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

Democracy Network அதிமுக முன்னணி என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறும் என்று Democracy Network கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)