இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?
அமைச்சர் சேகர்பாபுவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பிரியாணியால் தனக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது என்றாரா அர்ஜூன் சம்பத்?
பிரியாணியால் தனக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்றாரா திமுக எம்.பி செந்தில்குமார்?
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திருமலையை நடந்து சென்று அடைய 2388 படிகளை புதிதாக அமைத்துள்ளதா ரிலையன்ஸ்?
திருமலையை நடந்து சென்று அடைந்து சாமி தரிசனம் செய்ய 6588 பழைய படிகளுக்கு பதிலாக 2388 படிகள் உள்ள புதிய வழியை ரிலையன்ஸ் அமைத்துள்ளதாகப் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று சொன்னாரா டிஆர்பி.ராஜா?
கே.என்.நேரு செய்தது மிகப்பெரிய தவறு என்று டிஆர்பி.ராஜா கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)