Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாரா?
ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இஸ்லாமிய மத உடை அணிந்து கேரள அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
இஸ்லாமிய மத உடை அணிந்து ஓட்டுனர் ஒருவர் கேரள அரசுப் பேருந்தை இயக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று பரவும் வீடியோ உண்மையானதா?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ காட்சி திரைப்படம் ஒன்றின் காட்சியாகும்.

ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று நியூஸ்கார்டு வெளியிட்டதா தந்தி டிவி?
ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு தவறானதாகும்.

கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்றாரா அண்ணாமலை?
கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் கர்நாடக சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)