Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வைரலாகும் வீடியோவில் அரசு பேருந்து ஒட்டுநர் ஒருவரை இளைஞர் ஒருவர் சராமரியாக தாக்குகின்றார். அருகில் இருக்கும் நடத்துனர் அந்த இளைஞரை தடுக்க முயன்றும், அவரை மீறி அந்த இளைஞர் ஓட்டுனர் முகத்தில் ஓங்கி குத்துகின்றார்.
இந்த நிகழ்வானது தமிழகத்தில் நடந்ததாகவும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, அரசு பேருந்து ஓட்டுனர் தாக்குதல் நடைப்பெற்றதாகவும் கூறி பலர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.



Also Read: மாரிதாஸ் வழக்கில் ஆஜராகிறாரா சுப்ரமணியன் சுவாமி?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதுகுறித்த உண்மைத்தன்மையை அறிய வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு கீ பிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதல்ல, கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்டது என்கிற உண்மை நமக்கு தெரிய வந்தது.
கேரளாவின் பாலக்காடு பகுதியில் திருமணத்திற்கு சென்றுக்கொண்டிருந்த வாகனம் ஒன்றை கேரள அரசு பேருந்து ஒன்று முந்தியுள்ளது. இதனையடுத்து திருமண வாகனத்திலிருந்து இறங்கிய ஒரு கும்பல் பேருந்து ஓட்டுனரை சராமரியாக தாக்கியுள்ளனர்.
இதுக்குறித்து ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
கேரளாவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்நிகழ்வே தற்போது தமிழகத்தில் நடந்தததாக சமூக வலைத்தளங்களில் திரித்து பரப்பப்பட்டு வருகின்றது.
தமிழக காவல்துறையும் வைரலாகும் வீடியோ கேரளாவில் எடுக்கப்பட்டதென்பதை தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளனர். மேலும் இது போன்ற தவறான செய்தியை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
Also Read: கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறானது என்பதையும், அவ்வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்டது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
November 27, 2025
Ramkumar Kaliamurthy
November 20, 2025