வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkவேலூரில் சசிகலாவை வரவேற்க குவிந்திருந்த தொண்டர்கள் கூட்டமா இது?

வேலூரில் சசிகலாவை வரவேற்க குவிந்திருந்த தொண்டர்கள் கூட்டமா இது?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

வேலூரில் சசிகலா நடராஜனை வரவேற்க குவிந்திருந்த தொண்டர்கள் என்று புகைப்படம் ஒன்று டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Source:Twitter

Fact Check/Verification:

சசிகலா நடராஜன், கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர்.

ஜெயலலிதா தனது வார்த்தைகளிலேயே ஒருமுறை பேட்டி ஒன்றில், “சசிகலா எனது தாய்க்கு நிகரானவர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைதாகி 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதியன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நான்காண்டுகள் சிறைதண்டனைக்காக அடைக்கப்பட்டார் சசிகலா.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உறுப்பினர்களால் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலா, பிறகு அஇஅதிமுகவில் இருந்து விலக்கப்பட்டார்.

இச்சூழ்நிலையில், நான்காண்டுகள் சிறைதண்டனை முடிவடைந்து கடந்த ஜனவரி 27 ஆம் தேதியன்று கொரோனா சிகிச்சைக்காக பெங்களூரு விக்டேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா அங்கிருந்தே சிறைத்துறை அதிகாரிகளால் விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து, பிப்ரவரி 8 ஆம் தேதியன்று அவர் சென்னைக்கு பயணமானார். அன்று அவரை வரவேற்க வேலூரில் கூடிய தொண்டர்கள் கூட்டம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Twitter

Archived Link: https://archive.vn/lmhGy

டிவிட்டரில், சக்திவேல் மற்றும் நந்துவிசிஎன்கோபால் ஆகிய ஐடிக்களில் இருந்து இப்புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளன. மேலும், பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களிலும் இப்புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Source: Twitter

Archived Link: https://archive.vn/bFBvX

“வேலூரில் சின்னம்மா அவர்களை வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள். மகிழ்ச்சி வெள்ளத்தில்” என்கிற வாக்கியங்களுடன் வைரலாகும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய, நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அப்புகைப்படத்தையும் அதைத் தொடர்ந்து பரவும் தகவலையும் ஆராய்ந்தோம்.

உண்மையும் பின்னணியும்:

சசிகலா நடராஜனை வரவேற்க வேலூரில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் என்று பரவுகின்ற அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

Source: Google

அத்தேடலின் முடிவாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 5 ஆம் தேதியன்றே, அதாவது சசிகலா வெளியாகிய பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த ஒரு செய்திக் கட்டுரை நமக்குக் கிடைத்தது.

அதில், குறிப்பிட்ட அப்புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அச்செய்தியின் சாரம்சம் என்னவென்றால், உத்திரபிரதேசம் சாமிலியில் ஐந்தாவது மகாபஞ்சாயத் நிகழ்விற்காக காவல்துறை அறிவிப்பிற்கு எதிராகக் கூடிய விவசாயிகள் என்பதுதான்.

அதே பிப்ரவரி 5 ஆம் தேதியன்றே, விவசாயிகளின் இந்த மகாபஞ்சாயத் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: Twitter
Source: Twitter
Source: Twitter

அதாவது, சசிகலா பெங்களூரு – சென்னைக்கு பயணப்பட்ட பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இப்புகைப்படம் பலராலும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

Conclusion:

எனவே, சசிகலா நடராஜனை வரவேற்க வேலூரில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் என்று பரவுகின்ற புகைப்படம் உண்மையில் விவசாயிகளின் மகாபஞ்சாயத் நிகழ்வில், உத்திரபிரதேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

The Indian Express: https://indianexpress.com/photos/india-news/farmers-protest-mahapanchayat-shamli-farm-laws-7175947/

Twitter: https://twitter.com/search?q=shamli%20mahapanchayat&src=typed_query&f=live

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular