வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkகோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் நோயாளிகள் இட வசதியின்றி கீழே எல்லாம் படுக்க வைக்கப்பட்டுள்ளது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கோவை
Source: Facebook

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டி உயர்ந்து கொண்டு செல்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 300ஐ தாண்டியுள்ளது.

ஒருபுறம் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் மக்கள் உழல, தமிழக அரசு பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆக்சிஜன், படுக்கை வசதி என்று இந்தியாவே இந்த பெருந்தொற்றால் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் இடவசதியின்றி தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதான் இன்றைய ஆட்சியின் லட்சணம் என்பதாகவும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கோவை
Source: Facebook

Facebook Link

கோவை
Source: Facebook

Facebook Link

கோவை
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் நோயாளிகள் இட வசதியின்றி கீழே எல்லாம் படுக்க வைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ஆராய்ந்தோம்.

முதலாவதாக குறிப்பிட்ட புகைப்படத்தில் யாரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. இரண்டாவதாக பெரும்பாலோனோரின் சாயல் வடமாநிலத்தவர்களை ஒத்திருந்தது.

எனவே, குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதில் கடந்த 2020, ஏப்ரல் 4 ஆம் தேதியன்று எழுதப்பட்ட கட்டுரை ஒன்று பெங்காலி மொழியில் thedoctorsdialogue என்கிற இணையதளத்தில் நமக்குக் கிடைத்தது. அதில் குறிப்பிட்ட இந்த புகைப்படம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ட்விட்டரில் குறிப்பிட்ட புகைப்படம் குறித்த பதிவுகள் சில முறையே ஆகஸ்டு 29 2019, மார்ச் 16 2020 மற்றும் மார்ச் 15 2020 ஆகிய தேதிகளில் பகிரப்பட்டுள்ளன. அப்பதிவுகளில் குறிப்பிட்ட அப்புகைப்படமானது மேற்கு வங்க மாநிலத்தின் பர்தமான் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று இதனைப் பதிவிட்டுள்ளனர்.

Source: Twitter
Source: Twitter

மேற்கு வங்கத்தில், பர்தமான் அரசு மருத்துவமனையில் சுகாதார வசதிகள் சரியாக அமைக்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜி தலைமையிலான அரசினை சுட்டிக் காட்டும் வகையில் இந்த பதிவுகள் இடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா வார்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று யாரும் இதனைப் பதிவிடவில்லை. மேற்கு வங்க கம்யூனிஸ்ட் தலைவரான சூர்ய காந்த மிஸ்ரா ஆகஸ்டு 29, 2019 ஆம் ஆண்டு, அதாவது கொரோனா இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாகவே இந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

கோவை
Source: Twitter

Twitter Link

எனவே, குறிப்பிட்ட அப்புகைப்படம் கோயம்புத்தூரில் தற்போதைய கொரோனா நிலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஏனெனில், குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனைக்கும், குறிப்பிட்ட புகைப்படத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது இதன்மூலம் நமக்குத் தெளிவாகிறது.

Conclusion:

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தரையிலெல்லாம் படுக்கை வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் புகைப்படம் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Surya kanta Mishra: https://twitter.com/mishra_surjya/status/1166785934320230400

Twitter: https://twitter.com/DebjaniBhatta20/status/1239149477832744963

Twitter: https://twitter.com/Priyankabjym/status/1239497979419136000

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular