வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkகொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான படிவமா இது?

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான படிவமா இது?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 4 லட்சம் நிதி உதவி வழங்குவதற்கான விண்ணப்ப படிவம் என்று இணைப்புடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவால்
Source: Facebook

இந்தியா முழுவதும் கிட்டதட்ட ஜூன் மாதம் வரையில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது அலை இந்தியா முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், தமிழ்நாட்டிலும் இதன் தாக்கத்தால் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை முதல் அலையை விட இரண்டு மடங்காக அதிகரித்து இருந்தது.

கொரோனாவால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என்று இந்தியா முழுவதுமே இரண்டாம் அலையை சமாளிக்க திணறும் நிலைதான். சற்றே ஆசுவாசமாக தற்போது சிறிதளவு அதன் தாக்கம் குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தப்படுதல் அதிகரித்துள்ளதும் தொற்று குறைவதற்கான காரணங்களில் ஒன்று எனலாம்.

இந்நிலையில், பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் பெருவாரியாகப் பரவும் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் நான்கு லட்சம் உதவித்தொகையைப் பெறுவதற்கான படிவம் என்றும் தகவல் ஒன்று விண்ணப்பபடிவத்துடன் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

கொரோனாவால்
Source: Facebook

Facebook Link

கொரோனாவால்
Source: Facebook

Facebook Link

கொரோனாவால்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தில் இருந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சம் நிதி உதவி வழங்குவதற்கான விண்ணப்ப படிவம் என்று பரவும் தகவல் உண்மையானதா? அப்படி ஏதேனும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதா? என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ஆனால், அப்படி ஒரு செய்தி எந்த முன்னணி செய்தி நிறுவனங்களாலும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. மேலும், இதுகுறித்து ஆராய்ந்தபோது குறிப்பிட்ட அப்படிவத்தில் கடந்த 14 மார்ச் 2020 அன்று இப்படிவம் வெளியிடப்பட்டதாக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கீ வேர்ட் எனப்படும் முக்கிய சொற்கள் மூலமாக இதுகுறித்து ஆராய்ந்தபோது ஏ.என்.ஐ நிறுவனம் கடந்த மார்ச் 14, 2020 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த ஒரு ட்விட் நமக்குக் கிடைத்தது. அதில், உள்துறை அமைச்சகம் மூலமாக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சம் நிதியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Twitter

ஆனால், அதற்கான தெளிவான தரவுகள் எதுவும் வெளியாகாத நிலையில், 4 லட்ச ரூபாய் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் என்கிற தகவல் வைரலாகத் தொடங்கிய நிலையில், மத்திய அரசின் PIB நிறுவனம் இதனை மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது. SDRF மூலமாக இதுபோன்ற எவ்வித நிதி உதவி படிவமும் வெளியிடப்படவில்லை என்று அந்நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

கொரோனாவால்
Source: Twitter
Source: Twitter

Archived Link

மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதன் மீதான அடுத்தக்கட்ட விசாரணை வருகின்ற ஜூன் 11, 2021 என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த இணைப்புகளைக் கீழே கொடுத்துள்ளோம்.

Conclusion:

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தில் இருந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம் என்று பரவும் தகவல் தவறானதாகும் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

PIB:https://twitter.com/PIBFactCheck/status/1398623418518446085/photo/1

ANI:https://www.aninews.in/news/national/general-news/compensation-for-covid-19-deaths-nhrc-asks-union-home-ministry-to-act-in-two-cases20210531122611/ https://www.aninews.in/news/national/general-news/plea-in-sc-seeks-ex-gratia-of-rs-4-lakh-for-families-of-people-who-died-due-to-covid-1920210515175659/

Twitter: https://twitter.com/ANI/status/1238762720880541696

Economic Times: https://economictimes.indiatimes.com/news/india/pleas-in-sc-seek-rs-4-lakh-ex-gratia-to-kin-of-those-who-died-of-covid-19/articleshow/82905155.cms?from=mdr

BS: https://www.business-standard.com/article/current-affairs/sc-seeks-centre-s-reply-on-rs-4-lakh-ex-gratia-to-kin-of-covid-deceased-121052401167_1.html

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular