செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024

HomeFact Checkபால் விலையை திமுக அரசு 6 ரூபாய் உயர்த்தி 3 ரூபாய் குறைத்ததா?

பால் விலையை திமுக அரசு 6 ரூபாய் உயர்த்தி 3 ரூபாய் குறைத்ததா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பால் விலையை, தற்போது ஆட்சியில் அமைந்துள்ள திமுக அரசு 6 ரூபாய் ஏற்றி பின்னர் 3 ரூபாய் குறைத்ததாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பால்
Source: Facebook

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். இந்நிலையில், பதவியேற்றவுடன் தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று ஆவின் பாலின் விலை ரூபாய் 3 குறைப்பு என்பதாகும்.

இந்நிலையில், பாலின் விலையை ரூபாய் 6 என்று உயர்த்தி பின்னர் திமுக அரசு 3 ரூபாயாக குறைத்துள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பால்
Source:Facebook

Article Link

பால்
Source: Facebook

Article Link

பால்
Source: Facebook

Article Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

பால் விலையை ரூபாய் 6 ஏற்றி, பின்னர் 3 ரூபாய் குறைத்து திமுக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோம்.

முதலில், ஆவின் பாலின் விலையைக் குறைத்து வெளியான அரசாணையை ஆராய்ந்தோம். அதன்படி, தமிழக அரசு தற்போது பால் விலையை உயர்த்தவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக்காலத்தில் பால் கொள்முதல் விலை உயர்ந்த நிலையில், அனைத்து வகையான பால் விலையும் ரூபாய் 6 உயர்த்தப்பட்டது. 2019ம் ஆண்டு உயர்த்தப்பட்ட விற்பனை விலையான ரூபாய் 6ல் இருந்து தற்போது 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதுவே, தற்போதைய அரசாணையின் சாரம்சம்.

பால்
Source: Facebook

ஆனால், இதனை சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் பலரும் திமுக அரசே 6 ரூபாய் ஏற்றி, 3 ரூபாய் குறைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Conclusion:

பால் விலையை ரூபாய் 6 அதிகரித்து பின்னர் 3 ரூபாய் குறைத்த திமுக அரசு என்று பரவுகின்ற புகைப்படச் செய்தி தவறானதாகும் என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources

Govt: https://www.tn.gov.in/ta/pressrelease

Aavin: https://aavinmilk.com/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular