சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkதிமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்றாரா கமல்ஹாசன்?

திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்றாரா கமல்ஹாசன்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டிருப்பது போன்ற நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திமுகவின்
Source: Twitter

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமான பரப்புரைக் களத்தில் குதித்துள்ளன.

அந்த வகையில், நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி, பரப்புரை என்று பிசியாக இருக்கிறது.

இந்நிலையில், கமல்ஹாசன் திமுக குறித்து “திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Source: Twitter

Archived Link: https://archive.vn/egjO1

Source: Twitter

Archived Link: https://archive.vn/pYM4O

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்று கமல்ஹாசன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். ஆனால், அதில் சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும், அந்த நியூஸ்கார்டினை தொடர்ந்து ஆராய்ந்தபோது அதில் 11/04/2019 என்கிற தேதி இடப்பட்டிருப்பது நமக்குத் தெரிய வந்தது.

திமுகவின்
Source: Twitter

தொடர்ந்து, கமல்ஹாசனின் சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்து பார்த்தபோது அதில் அவர் இப்படிக் கூறியதாக எவ்வித பதிவும் இடப்படவில்லை.

Source: Twitter

எனவே, புதியதலைமுறையின் டிஜிட்டல் குழுவினைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது குறிப்பிட்ட அந்த நியூஸ்கார்டு வடிவமைப்பு தற்போது நடைமுறையில் இல்லை என்பது; பல நாட்களாகவே இதுபோன்ற போலி செய்திகள் குறிப்பிட்ட அந்த நியூஸ்கார்டு மூலமாக எடிட் செய்யப்பட்டு வலம் வருவதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

மேலும், கமல்ஹாசன் இதுபோன்று கருத்தினைக் கூறவில்லை என்பதையும், இது போலியான நியூஸ்கார்டு என்பதையும் அவர்களின் விளக்கம் மூலமாக நாம் அறிந்து கொண்டோம்.

Conclusion:

திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Puthiyathalaimurai: http://www.puthiyathalaimurai.com/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular